districts

img

திருப்பூரில் மாணவியர் விடுதி அமைக்க எஸ்எப்ஐ மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், செப்.25- திருப்பூரில் மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங் கத்தின் திருப்பூர் மாவட்ட மாணவிகள் மாநாடு ஞாயிறன்று வலியுறுத்தியது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட மாணவிகள் மாநாடு திருப்பூரில் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கல்கிராஜ் மாநாட்டை துவக்கி  வைத்து பேசினார். இதில், கல்வி நிலையவளாகங்களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், திருப்பூரில் மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாணவிகள் உபக்குழு மாவட்ட கன்வீனராக சுஜிதா, துணை கன்வீனர்களாக அனு சுபாஷினி, நிஷாந்தினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார் மாநாட்டை நிறைவு செய்து வைத்து பேசினார்.  இதில், மாவட்ட நிர்வாகிகள் மோகனப்பிரியா, சுதா, கிருஷ்ணகுமார், மணிகண்டன், உதயராஜ் உள்ளிட்டு  பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.