districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

செவிலியருக்கு பாலியல் சீண்டல்- கைது

கோவை, அக்.3-  கோவையில் செவிலியரை பாலியல் சீண்டல் செய்த  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத், ஹஸ்தினாபுரம், பாலாஜி நகரில் வசிப்பவர்  25 வயது இளம்பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களுடன் உதகைக்கு  சென்றுவிட்டு, திங்களன்று கோவை திரும்பினர். இதை யடுத்து, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நபர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், செவி லியரை பாலியல் சீண்டல் செய்த கேரள மாநிலம், பாலக் காட்டை சேர்ந்த சந்தோஷ் (40) என்பதும், அவர் கோவையில்  உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார்.  இதையடுத்து, போலீசார் சந்தோஷ் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது  செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

கோரிக்கைக்கு பதில் அளிக்காமல் தேசிய கீதம் இசைப்பு

கோவை, அக்.3- கோவை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கோரிக்கைகளுக்கு பதில்  அளிக்காமல் தேசியகீதம் இசைக்கும் படி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், சூலூர் அருகே பீடம் பள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம்  நடை பெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்திற்கு பீடம்பள்ளி ஊராட்சி தலைவ ரான அதிமுக-வை சேர்ந்த குமரவேல் தலைமை ஏற்றார். வேளாண்மை பொறி யியல் துறை சார்பாக செயற்பொறியாளர் நிவேதா, கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா,  ஊராட்சி செயலாளர் நீலவேணி மற்றும் பீடம் பள்ளி, நடுப்பாளையம் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து டன் துவங்கியது. தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்த வீடியோ பொதுமக்க ளுக்கு காண்பிக்கப்பட்டது.  பின்னர், பொது மக்களின், குறைகள்  கேட்கப்பட்டது. அப்போது ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பழனிசாமி என்பவர் கோரிக்கை விடுத்தார். அது தொடர் பாக விவாதிக்க வேண்டும் எனவும், ஊராட்சி  மன்ற தலைவரிடம் வலியுறுத்தினார். ஆனால், அது குறித்து பேச வாய்ப்பளிக் காமல் ஊராட்சி மன்றத் தலைவர், கூட்டம் நிறைவு பெற்றதாக கூறி தேசிய கீதம் இசைக் கப்பட்டது.  அப்போது பழனிச்சாமி, சாலை பணிகள் குறித்து விவாதிப்பதற்கு முன்பு எதற்காக தேசிய  கீதத்தை இசைக்கிறீர்கள் என கேட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தேசிய கீதம் இசைத்துக் கொண்டு இருந் தது.  இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்  மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் சூலூர் காவல் நிலையத்தில் பழனிச்சாமி மீது  தேசிய கீதத்தை அவமதித்ததாக புகார் அளிப் கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரித்து  வருகின்றனர்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் கடன் கிடைக்கவில்லை என புகார்

கோவை, அக்.3- கோவையில், ஒன்றிய அமைச் சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு மாபெரும் கடன் வழங் கும் நிகழ்வில், கடன் கேட்டு விண் ணப்பித்தும் கிடைக்கவில்லை என  கூறி சிறு தொழிலதிபர் வெளியேறி தால் சலசலப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜக அரசு, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங் கிகள் வாயிலாக, கோவை கொடி சியா வளாகத்தில், செவ்வாயன்று  கடனுதவி வழங்கும் விழா நடை பெற்றது. இவ்விழாவில், ஒன்றிய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ரூ.3,479 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்கு கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந் தது. இதையடுத்து, கடன் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது. அப்போது, சதீஷ் என்பவர் ‘தனக்கு கடன்  கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட் டேன்’ எனக்கூறி அங்கிருந்து வெளி யேறினார். இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய் தியாளர்களிடம் அவர் கூறியதா வது, கொரோனா ஊரடங்கிற்கு பின்  தொழில் நிறுவனங்களுக்கு கடன்  வழங்கப்படுவதாக மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி, வங்கியில்  கடன் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், கடனும் வழங்கவில்லை, முறையான பதிலும் வங்கி தெரி விக்கவில்லை. இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம்  அனுப்பினேன். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை என தெரிவித் தார்.  உடனடியாக அங்கிருந்த பாஜக  நிர்வாகிகள் அவரை மேடைக்கு அழைத்து சென்று சமாதானம் செய் தனர். பின்னர் அமைச்சர், ஆவணங் கள் சரிபார்த்து லோன் வழங்கப் படும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தார்.  இதனிடையே மாபெரும் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதா ராமன், ஒன்றிய அரசின் புகழ்பாடி கொண்டிருந்தார். அப்போது ஒருவர், தனது விண்ணப்பத்திற்கு கடனும் இல்லை, அதற்கு உரிய  பதிலும் இல்லை என கூட்டத்தி லேயே தெரிவித்த சம்பவம், கடன்  பெற வந்த பயனாளிகளிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

அவிநாசியில் எதிர்ப்பை மீறி மதுபானக் கடை திறப்பு மூன்று ஊராட்சி மக்கள் போராட்டம்

அவிநாசி, அக்.3- அவிநாசி அருகே பந்தம்பாளை யத்தில் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட  மதுபானக் கடையை மூடக்கோரி  செவ்வாயன்று  மூன்று ஊராட்சி களை சேர்ந்த பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேவூர் பந்தம்பாளையத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப் பிரமணியம் என்பவருக்கு சொந்த மான க/ச எண் 63/2ஏ என்ற இடத்தில்  கடந்த செப்.17அன்று மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து  செப்.19 அன்று வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி மக்கள் போராட் டம் நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என  அங்கு வந்த அதிகாரிகள் உறுதி  அளித்தனர். ஆனால் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள், இந்த மதுபான கடையை மூடக் கோரி  மீண்டும் செவ்வாயன்று போராட்டத் தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள்,  வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசி கள் என அனைத்து தரப்பினரும் இந்த  கடையால் பெரும் பாதிப்புக்குள்ளாவ தாகவும், இக்கடையை அப்புறப்ப டுத்தும் வரை போராட்டம் தொடரும்  என்று மக்கள் கூறினர்.அங்கு நூற் றுக்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து தடுத்துபோதும் மக்கள் அதை மீறி கடை முன்பு போராட் டம் நடத்தினர். கடையை நிரந்தரமாக  மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி மாலை 5  மணி வரை தொடர்ந்தனர். பள்ளி  முடிந்து வந்த அப்பகுதி மாணவர் களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சேவூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செவ்வாயன்று முதல் கடையை மூடுவதாக உறுதியளித்தபோதும் உடன்படாத மக்கள், எழுத்துப்பூர்வாக உறுதி யளித்தால் மட்டுமே கலைந்து செல் வோம் எனக்கூறி போராட்டதை தொடர்ந்தனர்.

சைனிக் பள்ளியில் தூய்மைப்பணி

உடுமலை, அக்.3- மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சைனிக் பள்ளி சார்பில் அமராவதி நகரில் தூய்மை பணி நடை பெற்றது. அமராவதி பள்ளி யின் அனைத்து மாணவர் கள், ஆசிரியர்கள், இதர பணி யாளர்கள், அமராவதி  நகர் மற்றும் அமராவதி அணை சுற்றி உள்ள இடங் களை தூய்மை செய்தனர்.

மின் கட்டண உயர்வால், உலர் சாம்பல் கற்கள் விலை உயர்வு

சேலம், அக்.3- மின் கட்டண உயர்வால் உலர் சாம்பல் கற்கள் விலை உயர்த்தப் படுவதாக சேலம் மாவட்ட உலர் சாம் பல் கற்கள் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கட்டுமான பொருட்களுக்கு செங் கல், பிரிக்ஸ் கல்லுக்கு அடுத்தபடி யாக உலர் சாம்பல் கற்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரு கிறது. சேலம் மாவட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட உலர் சாம்பல் கற் கள் உற்பத்திக் கூடங்கள் செயல்பட்டு  வருகின்றன. சிறு, குறு தொழில்  சார்ந்த இந்த உலர் சாம்பல் கற்கள் உற் பத்தி நிறுவனங்கள், தற்போது தமிழ் நாடு அரசின் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் மாவட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் நட ராஜன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், சேலம் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் 350க்கும் மேற்பட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி கூடங்களை நம்பி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நி லையில், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி  வரி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவித மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்,  உலர் சாம்பல் கற்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சாம்பல், மேட்டூர் பகுதியில் ரூ.1300 வரையிலும், நெய் வேலியில் ரூ.2500 வரையிலும் விலை  உயர்த்தப்பட்டுள்ளது. சிமெண்ட், சிறு ஜல்லிகள் விலையும் பன்மடங்கு  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உலர் சாம்பல் கற்களின் விலை உயர்வை  உயர்த்தப்பட உள்ளது. சேலம் மாவட் டத்தில் சாம்பல் உலர் கற்கள் 6 ரூபாய் மற்றும் கூடுதலாக ஜிஎஸ்டியும், மற்ற பகுதிகளுக்கு இடத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால் தற்பொ ழுது உற்பத்திக் கூடங்களுக்கு கூடு தல் செலவு அதிகமாவதால், வாரத் திற்கு நான்கு நாட்கள் மட்டுமே  தொழில் நடைபெறுகிறது. இதனால்  தொழிலாளர்களுக்கு வேலை  இழப்பு ஏற்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வா தாராம் பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது, என்றார்.

நகை கொள்ளை

ஈரோடு, அக்.3- ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் நகராட்சிக் குட்பட்ட நாராயண நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். தனியார் பேருந்து நடத்து நரான இவரது மனைவி தன லட்சுமி. இருவரும் சொந்த  வீட்டில் வசித்து வருகின்ற னர். கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன் சோமசுந்தரம் பணிக்கு சென்ற நிலையில், தனலட்சுமி தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதைய டுத்து இருவரும் திங்களன்று  மாலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக் கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியைடந்தனர். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தப்போது, பீரோவிலி ருந்த சுமார் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீ சார், சம்பவ இடத்திற்கு வந்து தடங்களை சேகரித்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இச்சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.