தருமபுரி, ஜூன் 23- நல்லம்பள்ளி அருகே சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள், அரசுப்பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து கழிவுநீர் வெளி யேறுவதற்காக கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப் பில் புதிய சாக்கடை கால்வாய் அமைக் கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் மேற்பகுதியிலி ருந்து கீழ்நோக்கி கழிவுநீர் செல்லும் வகையிலும், குடியிருப்புக்கு பகுதிக்கு செல்லும். இதற்கிடையே சாக்கடை கால் வாய் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதால் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப் புக்கு முன்புள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள் ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற் றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடி யிருப்பு மக்களுக்கு தொற்றுநோய் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகி றது. இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதி காரிகள் உறுதியளித்தனர்.