districts

img

சாலையில் ஆறு போல் ஓடும் கழிவு நீர்

திருப்பூர், செப்.13- திருப்பூர் புதிய பேருந்து நிலையம்  பிஎன். சாலையில் புதனன்று சாக்கடை  நீர் சாலையில் ஆறு போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளா னார்கள். திருப்பூர் புதிய பேருந்து நிலையம்  பிஎன் சாலை பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர் கள், வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் பயன்ப டுத்தும் பிரதான சாலை. மாழை காலங் களில் மழை நீரூடன் கழிவுநீரும் சேர்ந்து  சாலையின் அருகில் உள்ள கடைக ளுக்குள் வருகிறது என்று வணிகர்கள் ஏற்கனவே மாநகராட்சியில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புத னன்று பின் என் சாலை முதல் நெசவா ளர் காலனி வரை சாக்கடை நீர் சாலை யில் ஆறு போல் வழிந்து ஓடுயது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், பிஎன் சாலையில் உள்ள கால்வாய் நிரம்பி சாலையில் கழிவுநீர்  ஆறு போல் வழிந்து ஓடுகிறது. இதனால்  துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்க ளால் வாகன ஓட்ட முடிவதில்லை. மேலும் நடந்து செல்லவும் முடியாத  நிலை உள்ளது. இதனால் இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் வரும்  ஆயிரக்கணக்கான மக்கள் சிரமத்துக் குள்ளாகின்றனர். மேலும் புதிய பேருந்து நிலையம் முதல் நெசவாளர் காலனி வரை உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நோய்தொற்று பரவும் அபாயம் உள்ள தாகவும் தெரிவிக்கின்றனர். அடிக்கடி  இப்படி சாக்கடை நீர் சாலையில் ஓடுவ தால் எங்களுக்கு வணிகம் பாதிக்கப்ப டுகிறது எனவே உடனடியாக இவற்றை  சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.