districts

img

கோவையில் கனமழை: நிரம்பி வழியும் நீர்நிலைகள்!

கோவை, அக்.13- கோவை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் பெய்து வரும்  கனமழை காரணமாக, நீர் நிலை கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. வருகின்ற அக்.15 ஆம் தேதி யன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந் திய வானிலை ஆய்வு மையம் தக வல் தெரிவித்துள்ளது. இந்நிலை யில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உரு வான நிலையில், தமிழ்நாட்டில் திங் களன்று முதல் மிக கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இந்தாண்டு முன்கூட்டியே வட கிழக்கு பருவ மழை தொடங்க  வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டியுள்ள கோவை, திருப் பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்க ளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை மாநகர், புற நகர் பகுதிகளில் பல்வேறு இடங்க ளில் சனியன்று மிதமான மழை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து ஞாயிறன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில், பிற்பகலில்  30 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த  இடியுடன் தொடர் மழை பெய்த தது. காந்திபுரம், டவுன்ஹால், உக்க டம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், விமான நிலையம், விளாங்குறிச்சி,  சரவணம்பட்டி, கணபதி, குனிய முத்தூர், கவுண்டம்பாளையம் உள் ளிட்ட மாநகரப் பகுதிகளில் இடியு டன் தொடர் மழை பெய்தது. இத னால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் மற்றும் இடி காரணமாக நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. தீபா வளி நெருங்கும் நிலையில் கடை  வீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிக ரித்து வந்த நிலையில், கனமழை யால் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளின் இயல்பு நிலை பாதிக் கப்பட்டது.

குடிநீர் தொட்டிக்குள் புகுந்த கழிவுநீர்

சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையில் ஆகாஷ் வில்லா மற்றும் அப்பார்ட்மெண்ட்க்கு இடையே பொதுவான கழிவுநீர் குழாய் உள்ளது. இந்நிலையில், சனியன்று இரவு பெய்த மழையால்  மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் செல்லும் வழியை, வில்லா அசோ சியேசன் நிர்வாகிகள் அடைத்து விட்டனர். இதனால் மழைநீர், கழிவு நீருடன் அப்பார்ட்மெண்டுக்குள் உள்ளே இருந்த குடிநீர் தொட்டி யில் கலந்துவிட்டது. குடிப்பதற்கு வெளியே தண்ணி கேன் ஆர்டர் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர். இதுகுறித்து மாநக ராட்சி நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பார்ட்மெண்ட் நிர்வாகிகள் வலியு றுத்தியுள்ளனர். நிரம்பி வழியும் நீர்நிலைகள் கனமழை காரணமாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள குளம், தடுப்பணை கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அதன்ஒருபகுதி யாக, செல்வ சிந்தாமணி குளத்தி லிருந்து பெரிய குளத்திற்கு ஞாயி றன்று உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர்  சிவகுரு பிரபாகரன், செயற்பொறி யாளர் கருப்புசாமி, உதவி செயற் பொறியாளர் ஹேமலதா ஆகி யோர் ஆய்வு செய்தனர்.

சிறுவாணி அணை நிலவரம் கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம், வெகுவாக உயர்ந் துள்ளது. அணையின் மொத்த கொள்ளவான 44.61 அடியில், தற்போது 42.08 அடிக்கு தண் ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து,  கனமழை பெய்து வரும் நிலை யில் அணை முழு கொள் ளளவை அடையும் என்ற நிலை யில் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.