districts

img

சிபிஎம் கவுன்சிலர் முயற்சியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் திட்டம்

சேலம், ஜூலை 6- சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 13 ஆவது வார்டு  பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.மாணிக்கம் வெற்றி  பெற்றார். இந்த வார்டில் கவுன்சிலர் ஏ.மாணிக்கத்தின் முயற்சியால், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.27  லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாயக்கர் தோட்டத் திலிருந்து பவானி மெயின் ரோடு முதல் டிரா வல்லஸ் பங்களா வரை கழிவுநீர் வடிகால் திட் டம் கால்வாய் துவக்க நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, தாலுகா குழு உறுப்பினர் ராஜேந்தி ரன் மற்றும் தஸ்தகீர் அத்தா, பேரூராட்சி தலை வர் மணிமொழி முருகன், கவுன்சிலர் ஏ.மாணிக் கம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங் கேற்றனர். மக்களின் தேவை உணர்ந்து கழிவு நீர் வடிகால் வாய்க்கால் திட்டத்தை  கொண்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பி னரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் வர வேற்பையும், மரியாதையும் பெற்றுள்ளது.