உதகை, டிச.9- நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 813 வழக் குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.4½ கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனியன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும் மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை வகித்தார். இதில் காசோலை மோசடி வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், தொழிலாளர் சம்பந்தமான பிரச்சனைகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், தேசிய வங்கிகளில் வாராக்கடன், குடும்ப பிரச்சனை சம்பந்தமாக ஆயிரத்திற் கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் மக்கள் நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் சமரச முறையில் பேசி ரூ.4,48,96,615 மதிப்பிலான 813 வழக்கு கள் முடித்து வைக்கப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தில் மனு தாரர்கள், எதிர் மனுதாரர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்னதாக மாவட்ட நீதிபதி கூறுகையில், மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமரச முறை யில் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரை தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். மேலும் நேரம், பண விரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படு கிறது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என் றார். கூடலூரில் நீதிபதி முகமது அன்சாரி, பந்தலூரில் நீதிபதி சிவக்குமார், கோத்த கிரியில் நீதிபதி வனிதா, குன்னூரில் நீதி பதி சந்திரசேகரன் தலைமையில் மக் கள் நீதிமன்றம் நடைபெற்றது. சேலம் இதேபோன்று, சேலம் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் சம ரச தீர்வு மையத்தின் மூலம் இரு வழக்கு களுக்கு 53 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதி பதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி னார்.