districts

img

கொங்கணாபுரத்தில் பருத்தி நூற்பாலை அமைத்திடுக

சேலம், ஜூன் 20- கொங்கணாபுரத்தில் பருத்தி நூற்பாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொங்கணாபுரம் ஒன்றிய 5 ஆவது மாநாடு ஞாயிறன்று ராயணம்பட்டி நால் ரோடு பகுதியில் உள்ள கே. வரதராஜன் நினைவரங்கில் நடை பெற்றது. சங்கத்தின் கொடியை ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் ஏற்றி வைத்து தலைமை தாங்கி னார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு உரையாற்றினார். ஒன்றிய  செயலாளர் எஸ்.வெங்கடேசன், ஒன் றிய பொருளாளர் பி.பழனி ஆகி யோர் வேலையறிக்கையை முன் வைத்தனர். இதில், மாவட்ட செய லாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஎம் ஒன் றிய செயலாளர் பி.தங்கவேல் உட் பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், ஆசியாவி லேயே பெரிய பருத்தி கொள்முதல் கூட்டுறவு சொசைட்டி கொங்கணா புரத்தில் உள்ளது. ஆனால், ஒரு நூற் பாலையும் இங்கு இல்லை. எனவே கொங்கணாபுரத்தில் பருத்தி நூற் பாலை அமைக்க வேண்டும்.  வேளாண் இடுபொருட்களை வேளாண் அலுவலகத்தில் தட்டுப் பாடின்றி வழங்க வேண்டும். ஓம லூர் - சங்ககிரி வரை போடப்படும் 4  வழிச்சாலைக்கு நிலம் தந்தோருக் குச் சந்தை மதிப்பில் இழப்பீடு தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக பி.ஏழுமலை, செயலாளராக எஸ்.வெங்கடேசன், பொருளாளராக பி.பழனி, துணைத் தலைவர்களாக சுப்ரமணியன், லதா, துணைச்செயலாளர்களாக எஸ்.செம்மலையப்பன், சக்தி வேல் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு நிறைவுரை யாற்றினார். பி.பவித்ரா நன்றி கூறி னார்.