districts

img

கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தனி நலவாரியம் அமைத்திடுக

தருமபுரி, அக்.30- கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு கோழி வளர்ப்பு விவசாயிகள், விநியோகம் மற்றும்  ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கோழி வளர்ப்பு விவசாயிகள், விநி யோகம் செய்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்டத் தலைவர்  எம்.குமார், மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி உள் ளிட்டோர் உரையாற்றினர்.  இதில், கோழி வளர்ப்பு விவசாயிகள், ஏற்றுமதி யாளர்கள் நலன் கருதி தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கோழி வளர்ப்புக்கு இன்சூரன்ஸ் திட் டத்தை அமல்படுத்தவேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும். கறிகோழி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பாரபட்சம் இல்லா மல் அனைவருக்கும் கோழிதீவனத்தை கம்பெனி நிர்வாகம் வழங்கவேண்டும். விலைவாசி உயர்வு இடுபொருள் விலை உயர்வு கூலிஆள் கூலி இவை களை கணக்கில் கொண்டு 1-கிலோ கோழி வளர்ப் புக்கு கூலி ரூ.6.50-இல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வெயில் காலங்களில் ரூ.5-யை  ஒரு கிலோவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், பேரவை கூட்டத்தில் 11 பேர் கொண்ட மாவட்ட அமைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளராக ஆ.ஜீவானந்தம் தேர்வு  செய்யப்பட்டார். இதில், திரளானோர் பங்கேற்ற னர்.