districts

img

ரேசன் கடையின் முன்பு பந்தல் அமைத்திடுக

நாமக்கல், ஜன.10-  ரேசன் கடையின் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வந்த குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங் காடு  பகுதியில் சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர் கள் உள்ள இந்த பகுதியில், செவ்வாயன்று காலை முதலே பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  கடந்த பொங் கல் பண்டிகையின் பொழுது பல்வேறு தரப் பினர் மத்தியில் எழுந்த விமர்சனங்களால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாட்க ளில் ரேசன் கடைகள் முன்பு பந்தல் அமைக் கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பருகுவதற்காக சுத்தமான குடி நீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தற்போது இந்த ஆண்டு எந்தவித  ஏற் பாடும் இல்லாததால், பொதுமக்கள் குடிக்க குடிநீர் இன்றி வெயிலில் காய்ந்து நின்று பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற் பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் ரேசன் கடைகளின் முன்பு பந்தல் ஏற்படுத் தும் வகையில் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து  கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.