கோபி, பிப்.7- ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பட்டு வளர்ப்பில் நவீன நுட்பங்கள் குறித்து பட்டுவளர்ப்பு கருத்தரங்கம் உதவி இயக் குனர் மனீஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி தாஹீராபீவி, விவசாயிகளி டையே பட்டு வளர்பில் அதிக மகசூல் பெறுவது குறித்து கலந் துரையாடினார். மல்பெரி சாகுபடியில் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துதல், பட்டுவளர்ச்சிதுறை விஞ்ஞானிகள் பரிந் துரை செய்த மருந்துகளை தெளித்தல், பூச்சி தாக்கு தலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஊடுபயிர்கள் பயிரிட வேண்டுதல், நுண்ணுட்டங்கள் பயன்பாடு, கிருமி நீக்கம், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மண் பரிசோதனை அவசியம் என பட்டுவளர்ச்சியில் அதிக மகசூல் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனையடுத்து பட்டுவளர்ச்சிதுறை ஓய்வுபெற்ற உதவி இயக்குனர் ஞானசேகர் மற்றும் தாளவாடி பட்டுவளர்ச்சி துறை உதவி இயக்குனர் அப்துல்பாரூக் கலந்து கொண்டு, பட்டுவளர்ச்சிதுறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் பயன்கள் குறித்து விளக்கினர். இந்நிகழ்ச்சியில் மத்திய பட்டு வாரியம் ஓய்வு சிவசுப்பிரமணியம், கோபி பட்டுவளர்ச்சி ஆய்வாளர் சங்கவி, இளநிலை ஆய்வாளர் லோகநாயகி மற்றும் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மல்பெரி சாகுபடிக்கு தேவையான நுண்ணுட்ட உரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.