districts

img

கரூர் ஒன்றியப் பகுதியில் செந்தில்பாலாஜி பிரச்சாரம்

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கரூர் ஒன்றியம் நொய்யல், ஆலமரத்துமேடு, கட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்குச் சேகரித்து வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், புதிய காவிரிக் குடிநீர் திட்டம் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றார். பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்பாளர் வி.செந்தில்பாலாஜிக்கு பிரச்சாரத்தின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

;