districts

img

உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு

தருமபுரி, பிப்.5- பாலக்கோடு பகுதியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு  வாகனம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட் களின் தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் தருமபுரி மாவட்டம் முழுவதும் சென்று  உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறி தல் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்ட குழுவினர், பாலக் கோடு அரசு மகளிர் பள்ளியில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்பு ணர்வு செய்தனர். மேலும், நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து, கலப்படத்தை கண்டறிய இவ்வாகனத்தில் வசதிகள் உள்ளன. வாகனத்தில் உள்ள ஆய்வக பரிசோதனை மூலம்  உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிந்து, உணவு பாது காப்புத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தரமான பொருட்கள் நுகர்வோரை சென்றடைய முயற்சி மேற்கொள் ளும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.