பஞ்சாலை சங்கத்தின் சங்கத்தின் மூத்த தலைவர் எம். நஞ்சப்பன் அவர்களது நினைவு நாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், அஜய் குமார் உள்ளிட்ட பலர் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.