உடுமலை, நவ.2- எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை அரசு சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத் தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை ஒன்றியம், குட்டியகவுண்ட னூர் பகுதி தலித் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. தற்பொழுது இந்த வீடுகள் மிகவும் சிதிலமடைந்து, மக்கள் பயன்ப டுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் அதிகமான வீடுகள் பாழ டைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 20 வருடங்க ளுக்கு முன்பு எங்களுக்கு கட்டிதரப் பட்ட வீடுகள், தற்போது இடித்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு குடியிருக்க எங்களுக்கு அச்சம் ஏற்படு கிறது. அரசு சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளை சரி செய்து தருவது போல், எங்களின் வீடுகளையும் சீரமைத்து தர வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.