சேலம், நவ.27- தமிழ்நாடு பாலர் பூங்கா சேலம் வடக்கு மாநகர சிறப்பு பேரவை சேலம் சிறைதியா கிகள் நினைவகத்தில் ஆர். குருபிரசன்னா தலைமை யில் நடைபெற்றது.சேலம் மாவட்ட ஒருங்கினைப்பாளர் கே.ராஜாத்தி துவக்கி வைத் தார். இதில் கே.கல்யாண சுந்தரம், ஆர்.கே.லால் பாடல்கள் பாடினார் கள். எம்.கற்பகம் அறிவியல் கதை கூறினார். மாநில ஒருங்கினைப்புக்குழு உறுப்பினர் கே. ஜோதிலட்சுமி அமைப்பின் நோக்கங்களை விளக்கி பேசினார். இதில் மாநகர ஒருங்கி னைப்பாளராக எம்.கற்பகம், வழிகாட்டும் குழுவில் ஆர்.வி.கதிர்வேல், கே.கல்யாண சுந்தரம், ஏ.கௌசல்யா, ஜோசப், ஆர்.புரு ஷோத்தமன், மாநகரத் தலைவராக ஹாசினி, துணைத்தலைவர்களாக சரண், தாரணி, பிரக தீஷா, செயலாளராக ஸ்ரீஹரினி, துணைச் செயலாளர்களாக மகிலஷ், நிவேஷா, பிர கன்யா, பொருளாளராக வி.சரவணன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.