சேலம், மார்ச் 24- சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியம், மல்லியகுந்தம் ஊராட்சி, 2 ஆவது வார்டுக்குட்பட்ட முனி யப்பன் கோவில் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு என்.முருகேசன் தலைமை வகித்தார். இதில், விவசாயி கள் மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, ஒன்றியச் செயலாளர் பி.பழனிசாமி, ஒன்றியத் துணைத்தலைவர் எம். ரத்தினவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவராக என்.முருகேசன், துணைத் தலைவர்களாக என்.பூங்கோதை, சி.செல்வராஜ், ஆர்.நட ராஜ், செயலாளராக ஏ.நடராஜன், துணைச்செயலாளர்களாக பி.வெங்கடேஷ், எல்.விஸ்வநாதன், ஜி.ராசேந்திரன், பொரு ளாளராக பி.சரவணக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இக்கூட்டத்தில், அரசுக்கு சொந்தமான ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க அனைத்துவித போராட்ட நடவ டிக்கைகளிலும் இறங்கிடுவதென முடிவு செய்யப்பட்டது.