districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

“பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை”

செயலி மூலம் ரயில் பயணச்சீட்டு

சேலம், பிப்.16- ரயில் பயணச்சீட்டுகளை பெற பயணிகள் நீண்ட நேரம்  காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது செல்போன் செயலி  மூலம் பயணச்சீட்டு பெறலாம் என சேலம் ரயில்வே கோட்ட  முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியார்களிடம்  கூறுகையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணிகள்  வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வரு கிறது. அதில் பசுமையை நோக்கிய பயணத்தில் பேப்பர்  இல்லாத பயணச்சீட்டு நடைமுறைக்கு கொண்டு வரும்  வகையில் முன்பதிவு இல்லா பயணச்சீட்டுகளையும்,  மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளும் முறை  ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயலில் உள்ளது.  ஆனால், அதனை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது  இல்லை. எனவே “யுடிஎஸ்” எனும் செயலியை தங்களது  செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து  கொண்டால், அதன் மூலம் முன்பதிவு இல்லா ரயில் பயணச் சீட்டு, சீசன் டிக்கெட், நடைமேடை பயணச்சீட்டு உள்ளிட்ட  வசதியை சில விநாடிகளில் பெற்று கொள்ள முடியும். ரயில் நிலையத்திலிருந்து 20 மீட்டர் தொலைவிலும், 20  கிலோ மீட்டர் சுற்றளவிலும் மட்டுமே இந்த செயலியின் மூலம்  டிக்கெட்டுகளை பெற முடியும். ரயில் நிலையங்களில் உள்ள ‘க்யூஆர்கோடு’ ஸ்கேன் செய்தும் பயணச்சீட்டுகளை பெற  முடியும். ஆனால், ரயில் நிலையத்தில் இருந்தபடியே இந்த  செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெற  முடியாது. புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பயணிகள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி யதில்லை. வாலட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். சேலம் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும்  8 லட்சத்து 8 ஆயிரம் பயணிகள், 17 லட்சத்து 36 ஆயிரம்  முன்பதிவு பயணச்சீட்டுகளை பெற்றுள்ளனர். இதில் 2  லட்சத்து 18 ஆயிரம் பயணிகள் மட்டுமே டிஜிட்டல் முறையில்  பயணச்சீட்டுகளை பெற்றுள்ளனர். சேலம் கோட்டத்தில் ரயில்  பயணச்சீட்டுகளுக்காக பயணிகள் காத்திருப்பதை தவிர்க்க  13 தானியங்கி பயணச்சீட்டு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.  மேலும், 12 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதிலும், நேரடி யாகவோ அல்லது அங்கு நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலரி டமோ பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

இன்று வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி, பிப்.16- தருமபுரியில் வெள்ளியன்று (இன்று) தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தனியார் துறை  நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்ப முள்ள இளைஞர்களும் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்  தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வெள்ளியன்று (இன்று) காலை 10  மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார்  நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர்கள், மார்க் கெட்டிங் எக்சிகியூட்டிவ், மேற்பார்வையாளர்கள், மேலா ளர்கள், கணினி ஆப்ரேட்டர்கள், தட்டச்சர்கள், அக் ்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணி களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை

பென்னாகரம், பிப்.16- பாலக்கோடு வனச்சரகத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டபோது பிரிந்த ஒற்றை யானை வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் மீண்டும் பெண்ணாகரம் வனப்பகு தியை ஒட்டியுள்ள கிராமத்திற்குள் நுழைந்து விலை நிலங்களில் பயிர்களை சேதம் செய் தது. கர்நாடக மாநில வனப் பகுதியில் இருந்து அண்மையில் வெளியேறி பாலக்கோடு வன சரகத்திற்கு உட்பட்ட சஞ்சீவ ராயன் மலை பகுதி வழியாக, பாப்பாரப்பட்டி, குழிப்பட்டி,  சுரக்காய் பட்டி, கணவாய்ப்பட்டி சக்கல் நத்தம் கிட்டம்பட்டி, பனைக்குளம், இண் டூர், சோகத்தூர்,  உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து விளை நிலங்களில் பயிர் செய்யப் பட்டுள்ள ராகி கம்பு சோளம் நெல், கரும்பு ஆகியவற்றை சேதப்படுத்தி வந்தது. இதனை யடுத்து, வனத்துறையினர், மயக்க ஊசி  செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில், மீண்டும் கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங் களை சேதப்படுத்தி வருவதால் விவசாயி கள் அச்சமடைந்துள்ளனர்.

தரமற்ற தின்பண்ட பொருட்கள் விற்பனையை தடுத்க கோரிக்கை

தாராபுரம், பிப்.16- தாராபுரம் பகுதியில் நடைபெறும் தரமற்ற தின்பண் டங்கள் விற்பனையை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள்  தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தாராபுரம் வட்டார பகுதிகளில் டீக்கடை, பேக்கரிகள், மளிகை கடைகளில் முருக்கு, மிக்சர், பிஸ்கட், பன், வர்க்கி,  சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் பாலீத்தீன் பைகள் மற் றும் ஜாடிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நி லையில் பெரும்பாலான தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்ட தேதி, கலாவதி தேதி, எங்கு தயாரிக்கப்பட்டது உள்ளிட்ட எந்த  விபரங்களும் இன்றி வெறும் லேபிள்கள் மட்டும் ஒட்டப்பட் டுள்ளதால் கலாவதி தேதி தாண்டியும் விற்பனை செய்யப்படு கிறது. குறிப்பாக பாலீத்தீன் பைபளில் அடைத்து விற்கப்படும்  பொருட்கள் தரமற்று உள்ளதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட  தொந்தரவுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின் றனர். இதனை  நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதி காரிகள் ஆய்வு நடத்தி காலாவதி தேதி தாண்டி தின்பண்டங் களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

பி.எஸ்.என்.எல். சேவைகள்  விற்பனை உரிமம் பெற அழைப்பு 

திருப்பூர், பிப். 16 - பிஎஸ்என்எல் கோயம்புத்தூர் வணிகப் பகுதி முதன்மை  பொது மேலாளர் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் கோவை வர்த்தக பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் பகுதியில் சிம்  கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல்  சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறு வதற்கு விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை  வரவேற்கப்படுகின்றன. டெலிகாம் / எஃப்எம்சிஜி / எலக்ட் ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் அல்லது வேறு ஏதேனும் தயாரிப்பு களின் விநியோகஸ்தர் மற்றும் விநியோகஸ்தராக 3 வருட  அனுபவத்துடன் 50 லட்சம் விற்று முதல் கொண்ட ஆர்வமுள்ள  நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு http://www.tamilnadu.bsnl.co. in/tenderlistcircle.aspx என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 8903418128 என்ற எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

நாளை மின்தடை

தாராபுரம், பிப்.16- தாராபுரத்தில் சனியன்று  (நாளை) பராமரிப்பு பணிக ளுக்காக மின்தடை அறி விக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். கார்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழ்நாடு மின்சார வாரியம்,  பல்லடம் மின் பகிர்மான வட் டம், தாராபுரம் கோட்டம், தாராபுரம் 110-22 கேவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக ளுக்காக சனியன்று (நாளை)  காலை 9 மணி முதல் மதியம் 4  மணி வரை தாராபுரம் நகர்  மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம் பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண் ணாபட்டி, உப்பாறு டேம்,  பஞ்சப்பட்டி, சின்னப்புத் தூர், கோவிந்தாபுரம், செட்டி பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்சா ரம் நிறுத்தம் செய்யப்பட உள் ளது என தெரிவித்துள்ளார்.

இலவச வேட்டி, சேலை பற்றாக்குறை விடுபட்டோருக்கு வழங்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், பிப்.16– குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட் பட்ட 18 நியாயவிலைக் கடைகளில் சுமார்  15 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை  கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு இல வச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக் கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை கோரியிருக்கிறார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். மணிமேகலை, திருப்பூர் தெற்கு வட்டாட்சி யருக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 53ஆவது வட்டத் திற்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடை கள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி  வார்டுகள் 40, 41, 53, 54, 57 ஆகிய பகுதிகளை  உள்ளடக்கிய இந்த கடைகள் மூலம் இலவச  வேட்டி, சேலை பயனாளிகள் 21 ஆயிரத்து 916  பேர் உள்ளனர். தற்போது வேட்டி, சேலை  6200 எண்ணிக்கை மட்டுமே வந்துள்ளது. மீதி  15 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வேட்டி, சேலை இல்லாமல் உள்ளது.  இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூலி  வேலைக்குச் சென்று குடும்பம் நடத்துபவர்க ளாக உள்ளனர். எனவே எங்கள் பகுதியில் விடுபட்டுள்ள பொது மக்களுக்கு வேட்டி, சேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

18 வருடங்களாக உப்பு தண்ணீர்  குழாய் இல்லாமல் பொது மக்கள் அவதி

 அவிநாசி,பிப்.16- திருமுருகன்பூண்டி ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் 18 வருடங்களாக  உப்பு தண்ணீர் வசதி இல்லாமல் அவதிப்படுவதால், உப்பு  தண்ணீர் வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித் துள்ளனர்.  திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 11 ஆவது வார்டில் ஐஸ்வர்யா கார்டன் அமைந்துள்ளது. இப்பகுதியில் 60க்கும் மேற் பட்ட வீடுகள் இருக்கிறது. இதில் நகராட்சி  நிர் வாகம் 18 வருடங்களாக  உப்பு தண்ணீர்  வசதி செய்து கொடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இத னால் ஒவ்வொரு குடும்பத்தினரும் தண்ணீ ருக்காக மாதம் தோறும் 400 முதல் 1000 ரூபாய்   வரை செலவு செய்யும் சூழலுக்கு தள்ளப்பட் டுள்ளனர். வருட கணக்கில் பல்லாயிரம் ரூபாய் செலவாகிறது. இது ஒவ்வொரு குடும் பத்திற்கும் பெரும் நிதிச்சுமையை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே உடனடியாக உப்பு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க கோரி  அப்பகுதி பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரும் நகராட்சி ஆணையரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  இம்மனு குறித்து நகராட்சி ஆணை யர் தெரிவிக்கையில், ஆய்வு செய்து வீதிக ளுக்கு உப்புத் தண்ணீர் குழாய் விரைவில் ஏற்படுத்தித் தருகிறேன் என கூறியுள்ளார்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நகர  மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவ ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியம், குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கென்னடி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலை பணியை விரைந்து முடித்திடுக: மக்கள் சாலை மறியல்

சேலம், பிப்.16- சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வாழப்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குறிச்சி - அணைமேடு சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதி தாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை கண் டித்து புழுதிக்குட்டை- பேளூர் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி, ஆய்வாளர் உமா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகி யோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தார்ச்சாலை பணிகள் விரைவுபடுத்தப் பட்டு, முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொப்பூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டும்

தருமபுரி பிப்.16- தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப் படை வசதிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தொப்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உம் மியம்பட்டி, செட்டிகோம்பை, சந்திரநல்லூர், ஆவாரங் காடு போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராம பகுதிகளை கொண்டுள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட மலை ஓரங் களில் அமைந்துள்ள செட்டிகோம்பை,ஆவாரங்காடு, வெள்ளைகவுண்டன் கொட்டை போன்ற பகுதிகளில் போதிய அளவு குடிதண்ணீர் கிடைக்காததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து பலமுறை அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய் என்பதை  முறையாக திட்டமிடாமல் அமைக்கப்பட்டதினால் சரிவர குடிநீர் வருவதில்லை. எனவே, ஊராட்சி மன்ற அலுவலகம் அனைத்து பகுதி களுக்கும் குடிநீர் வசதி முழுமையாக கிடைக்குமாறு ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

முதல்வர் கோப்பைக்கான போட்டி நாமக்கல்லில் 12 ஆயிரம் பேர் பங்கேற்பு

நாமக்கல், பிப்.16- நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் கோப் பைக்கான விளையாட்டு போட்டிகளில் 11 அயிரத்து 900 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அள விலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டி கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த பிப்.3 ஆம் தேதியன்று தொடங்கியது. பள்ளி, கல் லூரி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுப்பிரிவினர் என தனித்தனியாக தடக ளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந் நிலையில், புதனன்று நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சி யில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடை பெற்றது. மேலும், பொது பிரிவினருக்கான கபடி போட்டி  நடத்தப்பட்டது. இறுதி போட்டியில் நாமக்கல் ஸ்போர்ட்ஸ் சங்கம் வெற்றி பெற்றது. 2 வாரம் நடைபெற்ற இப்போட்டிகளில், பள்ளி மாண வர்கள்  6 ஆயிரத்து 48 பேர், கல்லூரி மாணவர்கள்  4 ஆயி ரத்து 7 பேர், அரசு ஊழியர்கள் 924 பேர், பொது பிரிவினர் 798 பேர், மாற்றுத்திறனாளிகள் 123 பேர் என மொத்தம் 11 ஆயிரத்து, 900 பேர் பங்கேற்றனர்.

வரி பாக்கியை விரைந்து வசூலிக்க தருமபுரி நகராட்சிக்கு உத்தரவு

தருமபுரி, பிப்.16- நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு  நலத்திட்ட பணிகளுக்கு நிதி வருவாய் தேவைப்படுவ தால், வரி பாக்கியை விரைந்து வசூலிக்க வேண்டும் தருமபுரி நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரும புரி நகராட்சி, சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம்  கட்டப்பட்டு வருகிறது. இதேபோன்று தருமபுரி ஏஎஸ் டிசி நகரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முகமது அலி கிளப் சாலையிலுள்ள பழைய மார்க்கெட் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப் பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடை பெற்று வருகிறது. புறநகர் பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப் பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளது. மேலும், பென்னாகரம் சாலையில் 10  ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலை யம் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்கு நர் பொன்னையா, தருமபுரி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொ டர்ந்து அவர் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக் கும் பணிகள் தொடங்குவது குறித்து, சென்னை நக ராட்சி நிர்வாக இயக்குநரக கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன், சேலம் மண்டல செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தொழிலதி பர் டி.என்.சி. இளங்கோவன் மற்றும் துறை அலுவலர் களிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தருமபுரி நகராட்சி அலுவலகத் தில் துறை அலுவலர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்கு நர் பொன்னையா ஆலோசனை நடத்தினார். அப்போது, தருமபுரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை யில் உள்ள வரி இனங்கள் மற்றும் வாடகை கட்டணம் ரூ.13 கோடியே 50 லட்சத்தை விரைந்து வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உதகையில் ரூ.40 லட்சத்தில் ‘காட்சி கோபுரம்’

உதகை, பிப்.16- உதகை - 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரூ.40 லட்சம் செலவில் வேலிவியூ பகுதியில் தொலை நோக்கி யுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக் கும் பணி துவக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில்  கோத்தகிரி அருகே கொடநாடு காட்சிமுனை, குன் னூரில் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக்  காட்சி முனைகள் உள்ளன. தொட்ட பெட்டா மலைச்சிகரத்தில் காட்சி  கோபுரம் உள்ளது. இதுதவிர முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாயாறு அருவியை காண்பதற்கான காட்சி  கோபுரம் உள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள்  இயற்கை காட்சிகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மகிழ் கின்றனர்.  உதகையின் நுழைவுவாயிலாக  வேலிவியூ பகுதி விளங்கி வருகிறது. இங்கிருந்து பார்த்தால் பெரிய பள்ள தாக்கு பகுதியாக கருத்தப்படும்  தொட்ட பெட்டா சரிவில் அமைந்துள்ள கேத்தி பள்ளதாக்கு பகுதிகளும், மலை காய் கறி விவசாய நிலங்களையும் காண முடி யும். ஆனால் இப்பகுதியில் எவ்வித  காட்சி கோபுரமும் இல்லை. இவ்வழி யாக செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி பள்ளத்தாக்கு பகுதியை பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள். இந்நிலையில்,  நீல கிரி மாவட்டம் உதகை கண்டறியப்பட்டு  200 ஆண்டுகள் நிறைவடைந்ததை  சிறப் பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடந் தாண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் உதகை - 200 திட்டத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத் தார். இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி யாக உதகை நகராட்சி சார்பில் ரூ.40 லட் சம் செலவில் உதகை நகரின் நுழைவு வாயில் பகுதியான வேலிவியூ பகுதி யில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கும் பணிகள் துவக்கப் பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து கோடை சீசனின் போது திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல், பிப்.16- நாமக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய வாக னங்களை அதிகாரி பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்-கிற்கு, மின் வாரிய ஊழியர்கள் தலைக்கவசம் அணியாமல் பணிக்கு  வருவதாக புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தர வின்பேரில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலு வலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ் வரி ஆகியோர் பரமத்திவேலூர் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாக னம் ஓட்டிய மின்வாரிய ஊழியர்கள் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பதிவுச்சான்று புதுப் பிக்காமலும், வரி செலுத்தாமலும் போக்குவரத்து விதிமுறை களை மீறி இயக்கிய கார், கிரேன், இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் போது ரூ.45 ஆயி ரம் வசூல் செய்யப்பட்டது.

மின்தடை 

கோவை, பிப்.16- கோவை, குனியமுத்துார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள் ளியன்று (இன்று) மின்தடை  ஏற்படும் பகுதிகளை மின்வா ரியம் அறிவித்துள்ளது. க.க.சாவடி துணை மின்  நிலையத்திற்குட்பட்ட, முரு கன்பதி, சாவடிபுதுார், நவக் கரை, அய்யன்பதி, பிச்ச னுார், வீரப்பனுார், ஏ.ஜி.,பதி, குமிட்டிபதி, திருமலையாம் பாளையம், ரங்க சமுத்திரம். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி முதல் மின் விநியோ கம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.