districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அவிநாசி: தேர் கடைவீதியில் திரவ நைட்ரஜன்கள் பறிமுதல்

அவிநாசி, ஏப்.23- குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகை யில் விற்பனை செய்யப்பட்ட திரவ நைட்ரஜனை உணவுப்  பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திரு விழா நடைபெற்று வருகிறது. இப்பகுதியில், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திரவ நைட்ரஜனை பயன்படுத்தி ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை  தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து, தேர்க் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் ஸ்டாலின் பிரபு, அவிநாசி பேரூராட்சி சுகா தார ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அவிநாசி கரிவரதராஜப் பெ ருமாள் கோயில் அருகே கோவையைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவர் உடலுக்கு உபாதை ஏற்படுத்தகூடிய திரவ  நைட்ரஜன் பிஸ்கட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  இதை சிறுவர்கள் வாங்கி வாயில் போட்டால் வாய், மூக்கு,  காது வழியாக புகை வெளியேறும். இதை விளையாட்டாக சிறுவர், சிறுமியர் பணம் கொடுத்து  விரும்பி வாங்கி வருகின்றனர். ஆனால் இந்த பிஸ்கட்டில்  வைக்கப்படும் திரவ நைட்ரஜன் அளவு சிறிது கூடினாலும் நுரையீரல் உடனே பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து, உணவுப்பா துகாப்பு அதிகாரிகள் உடனடியாக கண்ணன் என்பவரிடமி ருந்து 11 லிட்டர் திரவ நைட்ரஜனை பறிமுதல் செய்தனர். இது போல இனி எங்கும் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தினர்.

குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்

திருப்பூர், ஏப்.23 - திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி பகுதியில்  பொது மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை இரண்டு மணி  நேரம் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சி பொது மக்களுக்கு சுத்கரிக்கப்பட்ட குடிநீர் உபகரணம் அம்மா பூங்கா வில் அமைந்துள்ளது. காலை 6.30 மணிக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் திறந்து விடப்பட்டு, 7.45 மணி அளவில் குடிநீர்  நிறுத்தப்படுகிறது.  இதனால் பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் பெற  முடியாமல் தவித்து வருகிறார்கள். கோடை காலம் என்பதால்  ஹவுசிங் யூனிட் மக்கள் தண்ணீரின்றி அலை மோதி வரு கிறார்கள். பொதுமக்கள் நிலைமையை கருத்தில் கொண்டு  ஹவுசிங் யூனிட் 11ஆவது வார்டு உறுப்பினர் ஆயிஷா சாதிக்,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹவுசிங் யூனிட்  பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காவல் துறை பாரபட்சம் என புகார்

சேலம், ஏப்.23- சேலத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை கைது செய்யாமல், அவருக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்படுவதாக பாதிக்கப் பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள பகுதி யைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த  பெருமாள் என்ற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள் ளார். இதனால் உடல் முழுவதும் காயங்களுடன் பாதிக் கப்பட்ட சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முதிய வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்யாமல் காவல் துறையினர் அவருக்கு ஆதரவாக  செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மிரட்டி அச்சு றுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப் பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சிறுமிக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்த முதியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையி னர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

மாட்டு கொட்டகை அமைத்து ஊழல்:  பொங்கலூரில் நூதன போராட்டம்

திருப்பூர், ஏப்.23 - பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லர்கள் மாட்டு கொட்டகை அமைத்து கொடுப் பதில் முறைகேடு செய்ததாக கூறி, மாடு மற்றும் சீர்வரிசை தட்டுடன் தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அம்பலப் படுத்தி பாராட்டு விழா நடத்தினர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்தி ருந்தனர். மேலும், இதன் மீது எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, இந்த முறைகேடை அம்பலப்ப டுத்தும் விதமாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்திருந்தது.  இதன்படி திங்களன்று பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில்  உள்ள தேவனம்பாளையம் பிரிவு அருகில் துவங்கி மேளதாளங்கள் முழங்க, இரண்டு மாடுகளுடன் சீர்வரிசை தட்டுகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நோக்கி சென்று அலுவலகத்தில் உள்ள அலுவ லர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை கொடுக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திற்குள் நுழைவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. நுழைவாயில் மூடப் பட்ட நிலையில், வாயில் அருகிலேயே சீர்வரிசை தட்டை வைத்து மேளதாளங்கள் முழங்க மாட்டு கொட்டகை அமைத்துக் கொடுத்ததில் ஊழல் முறைகேடு செய்த வர்களை பாராட்டுவதாக தெரிவித்தனர். இதில், பாதிக்கப்பட்ட காட்டூர்புதூர் பகுதி விவசாயிகளும், பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தை மோசடியாக பெற்ற மகன்கள் - தர்ணா

கோவை, ஏப்.23- சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியடித்த மகன்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை, மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்தவர் அம்மா சைப்பன் (80). மோட்டார் கம்பனி நடத்தி வந்துள்ளார். இவ ருக்கு செந்தில்குமார், ரவிக்குமார் ஆகிய இரண்டு மகன்க ளும், மகேஸ்வரி, சூர்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ள னர். இந்நிலையில் தனக்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை மகன்கள் மோசடியாக எழுதி  வாங்கிவிட்டு விரட்டியடிததாகவும், அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு மனு அளிக்க வந்தார்.  பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரி டம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மனு அளிக்க அதி காரிகளிடம் அழைத்து சென்றனர்.  இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன் தனது மகன்கள் தனக்கு சொந்தமான சுமார்  ரூ.10 கோடி மதிப்பிலான 40 செண்ட் நிலத்தை எழுதி வாங்கி யுள்ளனர். அதில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருவாய்  ஈட்டி தருவதாக கூறி மோசடியாக எழுதி வாங்கியுள்ளனர். இது  தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில், மகன்கள் தன்னை தாக்கி வெளியேறுமாறு மிரட்டுகின்றனர். அதுமட்டு மின்றி, தன்னை தாக்கி தற்போது குடியிருக்கு வீட்டை இடிக்க  வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், அவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறினார். தனது மகன்கள் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்ட தாக புகார் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவமனையில் செம்பு கம்பியை திருடிய வாலிபர் கைது

கோவை, ஏப்.23- கோவை அரசு மருத்துவமனையில் 100 கிலோ செம்பு  கம்பியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பி கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார்  வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர். அதில், அங்கு பிளம்பராக வேலை  பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஜெயதாஸ்  (28) என்பவர் திருடியது தெரியவந்தது. அவர் சிறிது, சிறிதாக  ரூ. 85 ஆயிரம் மதிப்பிலான 100 கிலோ செம்பு கம்பிகளை  திருடி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, ஏப். 23- பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு பாசன  சபை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை யின் அன்றைய நீர் இருப்பு மற்றும் எதிர் பார்க்கப்பட்ட நீர்வரத்தினைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்நி லையில், அணையிலிருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் வழங் கப்பட்டது. இது கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட் டைப்படை மதகுகள் மூலமாக 1 லட்சத்து 3  ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு அர சாணை பெற்று தண்ணீர் வழங்கப்பட்டது.  இந்நிலையில், வழக்கமான சராசரி ஆண் டைப்போலவே ஜனவரி மாதம் நீர் இருப்பு 17.09 டிஎம்சியாக இருந்தது. பிப்ரவரி, மார்ச்,  ஏப்ரல் மாதங்களில் 7.55 டிஎம்சி நீர்வரத்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய மழை யின்மை காரணமாக 2.95 டிஎம்சி மட்டுமே கிடைக்கப்பெற்றது. இது எதிர்பார்த்த வரத் தைவிட 4.60 டிஎம்சி குறைவாகும். மேலும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க் கால் பாசனம் மற்றும் குடிநீருக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 16.52 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் தற்போது 3.52 டிஎம்சியாக குறைந்துள் ளது. அணையின் குறைந்தபட்ச நீர் இருப்பு 1.80 டிஎம்சியாகும். மீதமுள்ள தண்ணீர் ஜுன்  30 வரை குடிநீர் பயன்பாட்டிற்குத் தேவைப்ப டுகிறது. எனவே, பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் 2 ஆவது நாளாக திங்க ளன்று பாசன சபை விவசாயிகள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரப ரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பி னும் போராட்டத்தை விவசாயிகள் கைவி டாத நிலையில், போலீசார் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

வள்ளல் அதியமான் பிறந்தநாள்

தருமபுரி, ஏப்.23- வள்ளல் அதியமானின் பிறந்தநாளை முன்னிட்டு, அதியமான் கோட்டை பகு தியிலுள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். தமிழ் சான்றோர்கள், விடு தலைப் போராட்ட தியாகிகள்  மற்றும் தலைவர்கள் ஆகி யோரை பெருமைப்படுத்தும் வகையில், அமைக்கப்பட் டுள்ள மணிமண்டபத்தில் அன்னரது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின்  சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி அரசு விழா வாகக் கொண்டாட அரசு ஆணையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தருமபுரி  மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், அதியமான்கோட்டை ஊராட்சியிலுள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான செவ்வாயன்று வள்ளல் அதியமானின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்வி ழாவில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கலந்துகொண்டு, வள் ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்கு மார், வருவாய் கோட்டாட்சி யர் காயத்ரி, செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் சு.மோ கன், நல்லம்பள்ளி வட்டாட்சி யர் பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.