சேலம், டிச.13- வேம்படிதாளம் பகுதியில் சேகுவேரா, பகத்சிங் நினைவக கட்டிட கட்டுமான பணி கள் துவங்கியுள்ளது. சிபிஎம் சேலம் தாலுகாவில், விசைத் தறி, கட்டுமானம், கைத்தறி தொழில்கள் நிறைந்த வேம்படிதாளம் ரயில்வே பாலம் அருகில் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகமான சேகு வேரா, பகத்சிங் நினைவக கட்டிட கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. புரட்சியாளர்கள் சேகு வேரா, பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி கட்டுமான பணியை தொடங்கினர். இதில், மாவட்ட செய லாளர் மேவை சண்முக ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் டி.பரமேஸ் வரி, சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ். பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் எ.சுந்தரம், எஸ்.ரங்கநாதன், டி.செல்வம் கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.