districts

img

அரசு போக்கு வரத்து கழக ஊழியர்களின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஈரோடு மண்டலம், சத்தியமங்கலம் பணிமனையில் அரசு போக்கு வரத்து கழக ஊழியர்களின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை மறியல்  நடைபெற்றது. மண்டலத் தலைவர் கே.மாரப்பன் தலைமையில் 60க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று, ஈரோடு பேருந்து  நிலையம், கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர், கவுந்தப் பாடி மற்றும் பெருந்துறை பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது.