திருப்பூர், அக். 17 – ராஜஸ்தான் மாநில அரசு நிறை வேற்றி இருப்பது போல, தமிழ்நாட் டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் திருப்பூர் மாவட்ட ஏழாவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அறிவியல் இயக்கத் தின் ஏழாவது மாவட்ட மாநாடு ஞாயி றன்று மாவட்டத் தலைவர் முனைவர் நசீரா தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ராணி ராம மூர்த்தி வரவேற்றார். இம்மாநாட் டில், மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு பேசும் போது, ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பதில் அறிவியல் மனப்பான்மை தொடங்குகிறது. ஆதார சாட்சியங் கள் அடிப்படையில் நம்பிக்கை கொள்வதே அறிவியல் மனப் பான்மை. அதை வளர்க்க வேண்டி யது அவசியம் என்றார். இரண்டாவது அமர்வில் இயற்கை காப்போம் என்ற தலைப் பில் திருப்பூர் இயற்கைக் கழகத் தலைவர் ரவீந்திரன் காமாட்சி பேசி னார். இயற்கை, விலங்குகள், பற வைகள் குறித்து நமக்குள் இருக்கும் மூடநம்பிக்கைகளை போக்கினால் தான் இயற்கை குறித்து சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறி னார். இதைத் தொடர்ந்து அமைப் பாய் திரள்வோம் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ராம மூர்த்தி பேசினார். இம்மாநாட்டில், பொதுமக்களுக் கும், பெண்களுக்கும், குழந்தைக ளுக்கும் எதிரான பேரழிவு ஏற்படுத் தும் போர் வேண்டாம், வேண்டும் சமா தானம் என்ற விழிப்புணர்வை அதிகப் படுத்துவது, கல்விக்கு ஒன்றிய பட் ஜெட்டில் 10 சதவிகிதம், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ஜிடிபி யில் 3 சதவிகிதம் நிதி ஒதுக்க வேண் டும். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் நீக்கியுள்ள டார்வின் பரிணாம வளர்ச்சி, மெண்டலீப் தனிம அட்ட வணை பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்,
ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கையைக் கூட்டி, அவர்க ளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும், ராஜஸ்தான் மாநில அர சைப் போல தமிழ்நாடு அரசும் நரபலி, பில்லி சூனியம், மாந்திரீகம் உள் ளிட்ட தவறான நம்பிக்கைகளுக்கு எதிராக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட் டம் கொண்டு வர வேண்டும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட மாவட்ட மைய நூலகத்தை விரைவில் திறக்க வேண்டும், திருப்பூரில் அன்றாடம் பல்கிப் பெருகி வரும் திடக்கழிவு களை மறுசுழற்சி செய்து வெளி யேற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இம்மாநாட்டில் திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் – கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச்செயலாளர் – கௌரி சங்கர், மாவட்டப்பொருளாளர் – ஸ்ரீராம்குமார், துணைத்தலைவர் கள் - சுசீலா, ராணி ராமமூர்த்தி, கார்த்திக், கார்த்திகேயன், நடராஜன். இணைச்செயலாளர்கள் - சந்துரு, சரண்யா, நிவேதா, பொன்னுச்சாமி, அஜித்குமார் ஆகியோர் புதிய நிர்வா கிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் மாநிலச் செயலா ளர் தியாகராஜன் நிறைவுரை ஆற்றி னார். திருப்பூர் வடக்கு ஒன்றியச் செய லாளர் திலக் நன்றி கூறினார்.