திருப்பூர், ஜூன் 12- கோடை விடுமுறைக்கு பின் திங்களன்று பள்ளிகள் திறக் கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவி களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு மாநகர கமிட்டியின் சார்பில் இனிப்புகள் மற்றும் பேனா வழங்கி வர வேற்பு அளிக்கப்பட்டது. 2023-2024 கல்வியாண்டிற்கான முதல் நாளில், நெசவாளர் காலனி உயர்நிலைப் பள்ளி மற்றும் குமார்நகர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களை வரவேற்கும் விதமாக வாழ்த்து மடல், இனிப்பு, பேனா மற்றும் பென்சில் வழங்கி வாலிபர் சங்கத்தி னர், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்ற னர்.