இளம்பிள்ளை, பிப்.24- இளம்பிள்ளை அருகே சாலையை கடக்க முயன்ற 2 மாணவர்கள், இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில், ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத் துக்குட்பட்ட சித்தர்கோயில் அருகே உள்ள லகுவம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில், அதேபகுதியை சேர்ந்த ஹிட்லர் என்ப வர் மகள் மேனகா 8 ஆம் வகுப்பும், மகன் அபிஷேக் 6 ஆம் வகுப்பும் பயின்று வரு கின்றனர். இந்நிலையில், வியாழனன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக லகுவம்பட்டி நிறுத்தம் அருகே பள்ளி முன்பு சாலையை கடக்க முயன்றனர். அப்போது, இளம் பிள்ளையில் இருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் மாண வர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மேனகா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் பொதுமக் கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப் பொழுது ஏற்கனவே இப்பகுதியில் அடிக் கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி இப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம் என பள்ளி நிர்வா கம் தெரிவித்தது. இதில், சமரசம் அடையாத பொதுமக்கள் சித்தர்கோயில் - சேலம் மெயின் ரோடு செல்லும் சாலையில் திடீ ரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த நெடுஞ் சாலைத்துறை ரோந்து காவல்துறையினர், இரும்பாலை காவல் ஆய்வாளர் ஜெய்சல் குமார் தலைமையில், வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், சேலம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் ரஹ்மதுல்லா சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து இடத்தை பார்வை யிட்ட பின், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் காவல் துறை சார்பில் உடனடியாக பேரிகார்டு களை வைத்து மீண்டும் விபத்து நடை பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண் டனர். இதைதொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்ற னர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.