districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பள்ளி சமையலறையில் கொள்ளை

சேலம், அக்.30- காடையாம்பட்டி அருகே அரசுப்பள்ளி சமையலறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, சமையல் எரிவாயு, அரிசி உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, தும்பிப்பாடி ஊராட் சிக்குட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளி வளாகத்தில் காலை உணவு செய்வதற்கான சமைய லறை உள்ளது. ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப் புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா  உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு குழந்தைக ளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளி சமையலறை யில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்கி வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், ஞாயிறன்று அடையாளம் தெரி யாத நபர்கள் சமையல் கூடத்தின் கதவு, ஜன்னல் உள் ளிட்வைகளை இடித்து உள்ளே புகுந்து, அங்கிருந்த சமை யல் எரிவாயு, அரிசி, பருப்பு, முட்டை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் அனைத்தையும் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், திங்களன்று காலை  உணவு செய்வதற்கு எந்த பொருட்களும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து குழந்தைகளின் பெற் றோர்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், காடை யாம்பட்டி வட்டாட்சியர் மாதேஸ்வரன், ஓமலூர் வட்டாட்சி யர், ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா,  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், காடையாம்பட்டி மற் றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆகி யோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகை யில், பள்ளியில் புகுந்து சமையல் பொருட்களை கொள்ளைய டித்த நபர்களை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக் கப்படும். பள்ளிக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப் படும். எனவே, பெற்றோர் அமைதி காக்க வேண்டும். குழந் தைகளுக்கு உணவு வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்..

கோவை புறநகரில் கொட்டி தீர்த்த கனமழை

கோவை, அக்.30- குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமாக  கோவை புறநகரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்  பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவ தால் தமிழகத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப் பாக கோவை உள்ளிட்ட 16  மாவட்டங்களில் கன மழை  பெய்யக்கூடும் என கணிக் கப்பட்டிருந்தது. இந்நிலை யில், திங்களன்று கோவை புறநகர் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத் துடன் காணப்பட்ட போதி லும், கடுமையான உஷ்ணம்  நிலவியது. இந்த நிலையில்  பிற்பகலில் கரு மேகங்கள்  சூழ்ந்து பெய்ய துவங்கிய மழை, சுமார் ஒரு மணி நேரத் திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.  இருகூர், பள்ள பாளையம், சூலூர் காங்கே யம் பாளையம், காடாம்பாடி, காமாட்சிபுரம் உள்ளிட்ட பகு திகளில் கனமழை வெளுத்து  வாங்கியதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போல கோவை மாநகர பகு திகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

உதகை, அக்.30- நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து குன் னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் விரிவாக்க பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நொண்டி மேடு முதல் லவ்டேல் சந்திப்பு வரையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது. மேலும், இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டது. சாலையின் இரு புறங்களி லும் இந்த கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், இச்சாலை யில் இரு புறங்களிலும் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில இடங் களில் நிழற்குடைகள் மற்றும் தடுப்புச்சுவர் கள் போன்றவை அகற்றப்பட்டன. இதில் உத கையிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் நொண்டிமேடு (சத்துணவு) பகுதியில் இருந்த நிழற்குடையும் அகற்றப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் பேருந்திற்காக தற்போது சாலையிலேயே காத்திருக்க வேண்டியுள் ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள் ளது. மேலும், மழைக்காலங்களில் ஒதுங்க கூட இடமின்றி பொதுமக்கள் மற்றும் பள்ளி  மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.

ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முயற்சி

மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து கோவை ஆட்சியர் பெருமிதம்

கோவை, அக்.30- மக்களின் ஆரோக்கியத்தை பாது காக்க மக்களை தேடி மருத்துவம் திட்டம் பெரும் பங்காற்றி வருவதாக கோவை  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட் சியர் கிராந்தி குமார் பாடி தெரிவிக்கை யில், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொரு ளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும். தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்க ளுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதில் கவ னம் செலுத்த வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.08.2021 அன்று மக்களை தேடி மருத்து வம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இய லாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்கின்றனர். மேலும், சிறுநீ ரக நோயாளிகளைப் பராமரித்தல், அத் தியாவசிய மருத்துவச் சேவைகளுக் கான பரிந்துரை குழந்தைகளின் பிற விக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில், கோவை மாவட் டத்தில் மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 3,15,629 உயர் இரத்த அழுத்த நோயா ளிகளும், 178:904 சர்க்கரை நோயாளிக ளும், உயர் இரத்த அழுத்தம் மற்றும்  சர்க்கரை நோய் ஆகிய இரண்டு நோய் களினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 1,53,470 நோயாளிகளும் கண்டறியப் பட்டுள்ளனர். இதுவரை 195,887 நபர்க ளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார் வலர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு  முறை வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதுகு தண்டுவடம் செய லிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட் டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசி யோதெரபிஸ்ட் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. இதுவரை 21848 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள் நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 21,359 நோயாளிகள் கண்டறியப் பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்புமருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 6 நோயாளிக ளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  கோவை மாவட்டத்தில் இதுவரை மொத் தம் 6,48,003 நோயாளிகள் கண்டறிப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. ஒவ்வொரு நோயாளியின் விபரம் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

75 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து இயக்கம்

தருமபுரி, அக்.30- 75 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப் பட்ட அரசு பேருந்திற்கு மலைவாழ் மக் கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லை நகர் என 10க்கும் மேற்பட்ட மலை  கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்க ளில் விவசாய மக்களும், மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர் கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவ சாய பொருட்களை சந்தைப்படுத்துவ தற்கும், மருத்துவமனை, அரசின் உத விகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் பேருந்து வசதி இல்லா மல் அவதிபட்டு வந்தனர். சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படவில்லை.  இதுகுறித்து அரசிற்கு நீண்ட நாட் களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தொடர்ந்து அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களிடம் கோரிக் கையை கவனப்படுத்தினர்.  இதையடுத்து மலை கிராமங்க ளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உள்ளிட்டோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக் கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து முதற்கட்ட மாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங் களை ஏற்காடு மலையோடு இணைக் கும் புதிய தார்சாலை அமைக்க உத்தர விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற் போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து இயக்குவதற்கு போக்கு வரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள் ளது, அதன்படி, இந்த மலைவாழ் மக் கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகு திக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கம் போதகாடு பகுதியி லிருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத் தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்களன்று  காலை இயக்கப்பட்ட பேருந்திற்கு மலை வாழ் மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் வரவேற்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், எங்கள் கிராமத்திற்கு நீண்ட கால கோரிக்கையாக இருந்த பேருந்து வசதி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி  அளிக்கிறது. இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரு வர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம். இதற்கு முழு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன் றியை தெரிவித்துக் கொள்கிறோம், என் றனர்.

உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் தீ

கோவை, அக்.30- கோவை மாநகரம், உக்க டத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மாநகர் பகு திகளைச் சேர்ந்த பொதுமக் கள் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி செல் வது வழக்கம். குறிப்பாக, வார இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும். இந்த மீன் மார்க்கெட் அருகே புதர் மண்டிய பகுதி காணப் படுகிறது. இப்பகுதியில் திங் களன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங் குள்ள பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததைக் கண்ட மீன் கடை உரிமையாளர்கள் தீயணைப்பு துறையின ருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

கிராமப்புற அரசுப் பேருந்தை  முறையாக இயக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், அக். 30 - பல்லடத்தில் இருந்து நடுவேலம்பாளையம், பள்ளிபா ளையம் வழியாக சோமனூர் வரை இயக்கப்படும் பி 9 அரசுப்  பேருந்தை உரிய நேரத்தில் முறையாக இயக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பி 9 அரசு பேருந்தை சாமளாபுரம் ஏவிஏடி பள்ளிக்கு  செல்லும் மாணவ மாணவிகளின் நலனை கவனத்தில் கொண்டு ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் சரியான முறை யில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று காலை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பல்லடம் கிளை  மேலாளரை மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த பேருந்து கால தாமதமாக  வருவதால் மாணவ, மாணவியர் கடும் மன உளைச்சலுக்கு  ஆளாகின்றனர். எனவே இந்த வழியாக இயக்கப்படுகிற பி9  பேருந்து ஊஞ்சப்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை  இருக்கிற அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் பள்ளி செல்வதற்கான ஒரே பேருந்தாக இருப்பதால் சரியான நேரத்துக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக ஆர்.பரமசிவம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள பெண்ணை மீட்டுத் தர குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர், அக். 30 - மலேசியாவில் சிக்கியுள்ள தனது மனைவியை இந்தியா  அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கண வர் உள்ளிட்ட குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளித்தனர்.  திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவ ணன். அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு  பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.  இந்நிலையில் சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் தன லட்சுமி பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். மலேசியாவில் வீட்டு  வேலைக்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதை தொடர்ந்து  ஏஜென்ட் ஒருவர் மூலம் ஒன்றரை லட்சம் செலவு செய்து தன லட்சுமி மலேசியா சென்றுள்ளார். ஆனால் ஏஜென்ட் கூறியது  போல வேலை வழங்காமல் அதிக வேலை வாங்கியுள்ளனர்.   இதனால்  அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். அதே  வேளையில் இவர்களின் மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப் பட்டு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை யில் இருக்கிறார். எனவே மனைவியை இங்கு திரும்பி வரும்படி சரவணன் அழைத்துள்ளார். ஆனால் வேலை செய் யும் இடத்தில் ரூ.2லட்சம் கொடுத்தால் மட்டுமே இந்தியா வுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில் சரவணன் தனது குடும்பத்தாரை கவனிக்க முடியாமல் சிரமப்படும் நிலை யில், தனது மனைவி தனலட்சுமியை மலேசியாவில் இருந்து  மீட்டு இங்கு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அவர் தனது மூன்று குழந்தைகளுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூர்  அபிராமி கார்டன் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகாமல்  தடுப்பதற்கு, வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பாட்டாளி  மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய: குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், அக். 30 - திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் ஏவிஎஸ் ரிச்  லேண்ட் பகுதியில் மின்னழுத்தக் குறைபாடு காரணமாக பல் வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இப்பிரச்ச னையை மின்வாரியம் சரி செய்து தர வேண்டும் என்று ஏவி எஸ் ரிச் லேண்ட் சமூக நல சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் நெருப்பெரிச்சல் ஏவிஎஸ் ரிச் லேண்ட் சமூக  நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற் றது. சங்கத்தின் தலைவர் இ.பி.ஜெயகிருஷ்ணன் பால் ஆண் டனி தலைமை ஏற்றார். 30க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர் கள் கலந்து கொண்டனர். செயலாளர் சாந்தி சௌந்தர்ரா ஜன் அறிக்கையை சமர்ப்பித்தார். தெருவிளக்கு, வடிகால், தார்ச்சாலை, சுகாதாரம், குடிநீர்,  பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை இந்த பகுதியில் செயல்படுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இந்த  பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகா ரிகளை நேரில் சந்தித்து மனு கொடுப்பது என தீர்மானிக் கப்பட்டது. அதேபோல் உப்பு தண்ணீர் விநியோகம் செய்யப் படும் தொட்டி மோசமாக பழுதடைந்துள்ளது. புதிய மோட்டார்  அறை கட்டி தொட்டி அமைத்து தருமாறு மாநகராட்சியைக் கேட்பது, இப்பகுதியில் மின் அழுத்தம் குறைவாக வரு வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மின்வாரி யத்தை அணுகி சரி செய்து தருமாறு மனு கொடுப்பது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான ரூ.40 கோடி  இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை

திருப்பூர், அக். 30 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந் தமான ரூ.40 கோடி மதிப்புள்ள 1.45 ஏக்கர்  நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கு  ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ராயபுரம் பகுதியில்  ஊராட்சி ஒன்றிய அலுவலர் குடியிருப்பு உள் ளது. இதற்கு பின்பக்கமாக, ஊராட்சி ஒன்றி யத்திற்குச் சொந்தமான இடத்தில் 25க்கும் மேற்பட்ட தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், பனியன் நிறுவனங்கள் கட்டி குடியி ருந்து வருகின்றனர். மேலும் இந்த இடத்திற்கு  பட்டா பெறுவதற்கும் முயற்சி செய்துள்ளனர்.  அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா வழங்க கோரி வழக்குத் தொடர்ந்திருந் தனர். தனிநபர்கள் தாக்கல் செய்த அனைத்து  மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து  விட்டது. அத்துடன் மேற்படி இடத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து ஊராட்சி ஒன்றியத்தின் அவசரக் கூட்டம் திங்களன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற் றது. இதில் தனிநபர்களுக்குப் பட்டா வழங்க  ஆட்சேபனை தெரிவித்து தீர்மானம் நிறைவ ேற்றப்பட்டது. மேலும் இந்த இடத்தில் ஆக்கி ரமிப்புகளை அகற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்திடம் ஒப்படைக்க முறைப்படி வட்டாட்சி யருக்கு கடிதம் அனுப்பி வைக்கவும் முடிவு  செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள இடத்தை திங்களன்று நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தனர்.

நவ.2 தாராபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தாராபுரம், அக். 30 - திருப்பூர் மாவட்டம் தாரா புரத்தில் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் மகாராணி கலை மற் றும் அறிவியல் கல்லூரியில்  வருகிற நவ.2ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம்  3 மணி வரை நடக்கிறது. முகா மில் கலந்து கொள்ள அனு மதி இலவசம். முகாமில் பங் கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் முன் பதிவு  செய்து கொள்ளலாம்.என்று  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் போர்வையில் மோசடி கோவை, ஈரோடு ஆட்சியர்கள் எச்சரிக்கை

கோவை, அக்.30- பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடு படும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகி யோர் தனித்தனியே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது, பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் என வும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை  பெற்றுக்கொண்டு, ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடு படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள் வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குபதிவு செய்யப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிக்கையாளர்கள் என்ற  பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல் களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர் களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில்  பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிக்கையாளர் என்ற  பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும்படி, அரசு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பத்திரிக்கையார்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும்  நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தகுந்த ஆதாரத்துடன் குறுந் தகவல் அனுப்பலாம். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளர் நியமிக்க மக்கள் கோரிக்கை

நாமக்கல், அக்.30- ஜேடர்பாளையம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என 52 கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப் பகுதியில் விவசாயம், நெசவு பட்டு தொழிலும் சிறந்து விளங்கு கிறது. மேலும் அணைக்கட்டில் அண்ணா பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த காவல் நிலை யத்தில் ஆய்வாளர் பணியிடம் நீண்ட வருடங்களாக நிரப்பப் படாமல் உள்ளது. தற்போது வரை பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் ஜேடர்பாளையம் பொறுப்பு பதவியில் உள்ளார். ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச்  11 ஆம் தேதியன்று இளம் பட்டதாரி பெண் பாலியல் வன் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜேடர் பாளையத்தில் விவசாய உபகரணங்களுக்கு தீ வைப்பு, மரங்கள், பயிர்கள் வெட்டி சாய்ப்பு சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங் களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்துள்ள னர். தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார் களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ் நிலை உள்ளது. மேலும், காவல் ஆய்வாளரை நேரில் சந் திக்க 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரமத்திவேலூ ருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள்  பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அனுமதி கையெழுத்துக் காகவும் காத்திருக்கும் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) மற்றும் இதர கோப்புகள் கால தாமதமாக ஆகிறது. இதனால் நேர விரையம் ஆகின்றன. ஆகவே ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்கு நிரந்தர ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என  52 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், கடந்த காலங்களில் ஜேடர்பாளையம் அமைதியான பகுதியாக இருந்தது. மேலும், ஜேடர்பாளையம் சிறிய பகுதியாகவும் உள்ளது. அங்கு அதிக குற்றங்கள் பதிவாகவில்லை. தற்போது கடந்த  சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இத்தகைய சூழ்நிலை உள்ளது. வரும் காலங்களில் அரசு உத்தரவுபடி தற்போது உள்ள உதவி ஆய்வாளர்களை ஆய்வாளராக பதவி உயர்வு ஏற்படும்போது, ஜேடர்பாளையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் நியமிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

வைரஸ் காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பரிசோதனை

நாமக்கல், அக்.30- திருச்செங்கோடு அருகே தேவனாங் குறிச்சி பகுதியில் வைரஸ் காய்ச்சலால் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத னையடுத்து, சுகாதாரத்துறையினர் முகா மிட்டு, மாணவி பயின்ற பள்ளி, இருப்பிடம் ஆகிய இடங்களில் பரிசோதனையை தீவிரப் படுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, தேவனாங்குறிச்சி பகுதியில், முத்து குமாரசாமி கோவில் தெருவை சேர்ந்த தறித் தொழிலாளர்கள் தமிழரசன் (32, நித்யா (28). இவர்களது மூத்த மகள் ஆறாம் வகுப்பு படிக்கும், 11 வயதான மிருத்திகா என்ற  மாணவி. கடந்த 10 தினங்களாக வைரஸ் காய்ச் சலில் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில், காய்ச்சல் குணமாகாமல் இருந்ததால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த 4 தினங்களுக்கு முன் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலை யில், ஞாயிறன்று மாணவி சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.உமா, திருச்செங்கோடு அரசு  மருத்துவமனையில் மாணவியின் மரணத் திற்கான காரணம் குறித்து மருத்துவர்களை கேட்டறிந்தார். மாணவி இறப்புக்கு காரணம் டெங்கு காய்ச் சல் இல்லை எனவும், கடைசியாக எடுத்த ரத்தப் பரிசோதனையில் 3 லட்சத்து 20 ஆயிரம் எண்ணிக்கையில் பிளேட்லெட்  இருந்ததாக வும் தெரியவந்தது. மேலும், மாணவி வைரஸ்  காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாணவி பயின்று வந்த  பள்ளி, வசித்து வரும் குடியிருப்பு பகுதிகளி லும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளு மாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் தேவனாங்குறிச்சியில் முகாமிட்டு பரிசோ தனை மேற்கொண்டனர். பள்ளியில் வேறு  யாருக்காவது மாணவிகள், மாணவர்க ளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். இதுவரை  நான்கு மாணவர்கள் வைரஸ் காய்ச்சல்  காரணமாக அந்த பகுதியில் இருந்து மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தேவனாங் குறிச்சி பகுதியில் கொசு மருந்துகள் அடிக் கப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்றன. மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு பலி யான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாமக்கல், அக்.30- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக் குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர்  மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற் றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தினர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொ டர்ந்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது  செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலை யில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை கல் வித்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தர விட்டுள்ளனர்.