districts

img

மோடியின் நிகழ்வில் பள்ளிக் குழந்தைகள்

கோயம்புத்தூர், மார்ச் 19- கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் வாகன பேரணி நிகழ்ச்சி யில் பள்ளி குழந்தைகளை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோர் தலைமை ஆசிரியரி டம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். 

கோவையில் திங்களன்று பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சார வாகன பேரணி யில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மோடியை வரவேற்க சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டி ருந்தன. பாஜகவினருக்கு சொந்த செல் வாக்கு இல்லை என்றபோதும், கூட்டத்தை கூட்ட மாநிலம் முழுவதும் இருந்து ஆட்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்களை கட்டாயப் படுத்தி வரவழைத்தனர். இதேபோன்று, அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டனர். 

சீருடையுடன் குழந்தைகள்
இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாய் பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 50 பள்ளி மாணவிகள் சீருடை யுடன் கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.  இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. தேர்தல் ஆணையத்தின் வழி காட்டு நெறிமுறையில் உள்ள தேர்தல் பிரச் சாரங்களில் பள்ளி குழந்தைகளை பயன் படுத்தக் கூடாது என்பதை பாஜகவினர் மீறிய தற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டத்தை  தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி யில் பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலு வலர் விசாரிக்க மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டார்.  

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி சாய்பாபா பள்ளிக்கு  நோட்டீஸ் அளித்தார். பள்ளி குழந்தைகளை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல உத்தர விட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியரான அழகுவடிவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற் கொண்டார். இதே போல் மாவட்ட கல்வி  அலு வலரும் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களிடம் விசாரணை  மேற்கொண் டார்.  இந்த விசாரணை அறிக்கை யை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ள னர். இறுதியாக பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திய நபர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்
சென்னை தலைமைச் செயலகத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், “திமுக சார்பாக இரண்டு புகார்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடைபெற்ற ஒரு  நிகழ்ச்சியில் மதத்தின் பெயரால் ஓட்டு சேக ரித்துள்ளார். “கோவில்களை அழிக்கக் கூடிய, கோவில்களை சுரண்டக்கூடிய, மதத்தையே அழிப்பேன் என்று பேசும் கட்சிக் கெல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்?” என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி யிருக்கிறார்.

தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்கக்கூடாது. ஆனால் அதை மீறி வேண்டுமென்றே நிர்மலா  சீதாராமன் இப்படி ஒரு பேச்சை பேசி யிருக்கிறார். இதற்காக அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த சட்டம் மீறல்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்  மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இதை யெல்லாம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

அதேபோல் பிரதமர் திங்களன்று (மார்ச் 18) கலந்து கொண்ட வாகன பேரணியில் பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்டு அங்கே  அவர்களுக்கு காவி துண்டுகள் போடப்பட்டு பாஜகவை புகழ்ந்து பாடல்கள் பாட வைத்திருக்கிறார்கள். குழந்தைகளை எந்த வித தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், பாஜக தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அவர்களுக்கு ஆதரவு இருக் கிறது என்று காட்டுவதற்காக தேர்தல் நடத்தை விதியை மீறியிருக்கிறது.

மேலும் குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டத்தின்படி இது குற்றமாகும். இதை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.