தருமபுரி, மார்ச் 3- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட ரங்கில், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையினை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று, 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இந் நிலையில், இவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரியில் உள்ள ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 34 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8.50 லட்சம் கல்வி உதவித் தொகைக் கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் து. கணேஷ்மூர்த்தி, ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத் தின் தலைவர் ஜெ.பாலகுமரேசன், மாவட்ட கல்வி அலுவ லர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.