கோவை, மே 28- கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை பெறும் மனுதாரர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி யற்றவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.400 , பட்டதாரி தேர்ச்சி பெற்றவர் களுக்கு ரூ.600 வீதம் மனுதாரர்களின் வங் கிக் கணக்கில் இசிஎஸ் மூலம் ஒவ்வொரு காலாண்டிற்கும் செலுத்தப்பட்டு வருகி றது. ஜீன் 30 ஆம் தேதியுடன் முடிவடை யும் காலாண்டிற்கு, புதிய பயனாளிகளை கண்டறியப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனு தாரர்களுக்கு ஓராண்டு நிறைவடைந்தி ருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியற் றவர்களுக்கு (அ) தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர் களுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 வீதம் மாதந்தோறும் வழங்கும் திட்டம் அம லில் உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி யன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளி பதிவுதாரர் களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங் கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலை யில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால், தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் https://tnvelaivaaip pu.gov.in என்ற இணையதளத்தில் உரிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பூர்த்தி செய்து வரு வாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஜி.எஸ்.சமீரன் தெரி வித்துள்ளார்.