districts

img

பனியால் கருகும் தேயிலை: வாரியம் மூலம் உதவித்தொகை

உதகை, டிச.16- பனியால் கருகும் தேயிலைப்பயிர் களுக்கு, தேயிலை வாரியம் மூலம் உத வித்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா  தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், விவசாய சங்கங்களிடமிருந்து பெறப் பட்ட கோரிக்கைகளில் 26 கோரிக்கை கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டன. இதைத்தொடர்ந்து கூட் டத்தில், நீலகிரி மாவட்டத்தில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தில் அமைக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்க ளின் வாய்ப்பினை பயன்படுத்தி விவசா யிகள் லாபம்பெற ஆலோசனை வழங் கப்பட்டது. கூடலூர் பகுதி விவசாயிக ளின் கோரிக்கையை ஏற்று, பாகற்காய் போன்ற பந்தல் காய்கறிகளின் சாகுபடிக் காக குறைந்த செலவில் மானிய விலை யில் பந்தல் அமைக்க அரசுக்கு கருத் துரு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட் டது. பாரம்பரிய நெல் விதைகளை பா துகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. உதகை உழவர் சந்தையில் பராமரிப்பு பணிகளை ஒரு வார காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் மினி டிராக்டர் மானியத்தில் வழங்கப் பட்டு வருகிறது என்றும், தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகலாம் எனவும் தெரி விக்கப்பட்டது. உதகை பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க இடம்  தேர்வு செய்ய அறிவுரை வழங்கப்பட் டது. பனி பொழியும் காலத்தில் பாதிப் படையும் தேயிலைப் பயிருக்கு, தேயிலை வாரியத்தின் மூலம் உதவித் தொகை வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட் டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், ஆவின் பொது மேலா ளர் ஜெயராமன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.