districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வேலை வாங்கி தருவதாக மோசடி

கோவை, செப்.2- வேலை வாங்கி தருவதாக கூறி கோவை யில் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் டி. கல்லிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (67). இவர் தேனி பேருந்து நிலையத்தில் தற்காலிக நேர காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு அரசு  வேலைக்காக முயற்சி செய்து கொண்டி ருந்தார். அப்போது கோவை, குனிய முத்தூரை சேர்ந்த பாக்கியராஜ், தெரசா, கிருஷ்ண லதா, ராஜசேகர், ஆறுமுகம் ஆகி யோர் அறிமுகமானார்கள். இவர்கள் ஆனந்த னிடம் உங்களது மகனுக்கு அரசு வேலை  வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.  அதற்கு சிலரிடம் பணம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.  இதனை நம்பிய ஆனந்தன், கடந்த 2020ஆம் ஆண்டுக பல்வேறு தருணங்களில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்று கொண்டவர்கள், வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஆனந்தன், அவர்களிடம் கேட்டபோது பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.  இந்த மோசடி குறித்து ஆனந்தன், கோவை குனியமுத்தூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நம்பிக்கை  மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவையை சேர்ந்த பாக்கியராஜ், தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர், ஆறுமுகம் ஆகிய  5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் கொள்ளை

கோவை, செப்.2- இருசக்கர வாகனத்தில் வைக்கபட்டிருந்த ரூ.50 ஆயி ரத்தை கும்பலாக வந்து கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள  சிறுமுகை வீராசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்.  இவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரியாக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமுகை கனரா வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில்  டீ தூள் வாங்க தனது இருசக்கர வாகனத்தினை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு  பேர் கொண்ட கும்பல் பணம் வைத்திருந்த இருசக்கர வாக னத்தினை சுற்றி நின்று கொண்ட நிலையில் ஒரு நபர் கண்  இமைக்கும் நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்த பணத்தை  எடுத்து கொண்டு தப்பி சென்றனர். மகேந்திரன் டீ தூள்  வாங்கி விட்டு வந்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை பார்த்த போது பணம் காணவில்லை. இதை யடுத்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த போலீசார் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திட்டமிட்டு திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை சிறுமுகை போலீசார் தேடி வருகின்றனர்.

மது விற்பனை  2 பேர் கைது

கோவை, செப்.2- கோவை, வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற் பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், வட வள்ளி போலீசார் டாஸ் மாக் கடை அருகே சோதனை செய்தனர். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய் தது தெரியவந்தது. இதனையடுத்து சிவ கங்கை மாவட்டம், காளை யார் கோயிலை சேர்ந்த  கார்த்திக் (38), புதுக் கோட்டையை சேர்ந்த வீர சிங்கம் (30) ஆகிய இரு வரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1631  மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்  இருவரையும் நீதிமன் றத்தின் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

கோவில்களின்  5721 ஏக்கர் நிலங்கள்  ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை,செப்.2-  இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பா டுகள், 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கோவில்க ளில் உலோகத் திருமேனிகளை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  இதுவரை 1,833 உலோகத் திருமேனி பாது காப்பறைகள் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு 1,737 பாதுகாப்பறைகள் கட்டிட பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 139 பணிகள் நிறைவுற்றுள்ளன. 927 பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப் பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 925 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. செப்டம்பர் 3 ஆம் தேதி 38 கோவில்களிலும், செப்டம்பர் 4 ஆம் தேதி 13 கோவில்களிலும் குட முழுக்கு நடைபெற உள்ளது. கோவில்களுக்குச் சொந்தமான ரூ.5,169 கோடி மதிப்பீட்டிலான 5721 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் காளிபாளையம் மக்கள் கோரிக்கை

திருப்பூர், செப்.2- 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை 4 நாட்களுக்கு  ஒருமுறையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளிபாளையம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதுகுறித்து காளிபாளையம் பொதுமக்கள் கூறிய தாவது, காளிபாளையம் ஏடி காலனி பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். சப்பை தண் ணீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், நல்ல தண்ணீர் 15  நாட்களுக்கு ஒரு முறையும் மட்டுமே வருகிறது. இதனால் தண் ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட் டுள்ளோம். நல்ல தண்ணீர் மாதம் ரூ.700க்கு இருமுறை வாங்க  வேண்டிஉள்ளது. குறைந்தது நான்கு நாட்களுக்கு ஒரு முறை யாவது நல்ல தண்ணீர் விட வேண்டும். சப்பை தண்ணீர் தின சரி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித் தனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்  திருப்பூர் மாநகரில் சிறப்பு முகாம்

திருப்பூர், செப். 2  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரி களுக்கு கடன் வழங்கும் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான  சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோ ரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மத்திய அர சின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  முதற்கட்ட கடன் வழங்குவதற்கான விண்ணப்ப பதிவு முகாம்  சனியன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  வீரபாண்டி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில்  ஏராளமானோர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு  செய்தனர். இதுவரை நான்காயிரம் பேர் விண்ணப்பம் பதிவு  செய்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட் டமாக மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் தொடர்ந்து பல் வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது.

தீயணைப்புத் துறை ஒத்திகை நிகழ்ச்சி
திருப்பூர், செப். 2 - திருப்பூரில் தீயணைப்பு துறை சார்பில் பருவமழை முன் னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில் பருவமழை  காலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தாலோ அல்லது நீர்நிலைப் பகுதிகளில் ஏற்படும் வெள் ளத்தில் சிக்கிக் கொண்டாலோ பொது மக்கள் தங்களை தாங் களே காத்துக் கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி திருப்பூர்  தெற்கு தீயணைப்பு துறை சார்பில் காமராஜர் சாலையில் உள்ள  கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் நடை பெற்றது.  மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை பொதுமக் கள் தாங்களாக தங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டு  மீட்டு வருவது குறித்த ஒத்திகை நிகழ்வும் நடைபெற்றது.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூர், செப். 2 -  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 சார்பாக தேசிய ஊட்டச்சத்து வாரத்தை  முன்னிட்டு சனியன்று தத்தெடுத்த கிராமமான கருமாபளை யத்தில் உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் - ஊட்டச்சத்தை  வாங்குங்கள்” என்ற மையகருத்தை வலியுறுத்தி வீடு வீடாக  சென்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 ஆலோசகர் காமராஜ்  முன்னிலை வகித்தார். கிராம பஞ்சாயத்து தலைவர் பூங் கொடி சக்திவேல், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் விழிப்பு ணர்வை துவக்கி வைத்தனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்த ரம், ராஜபிரபு, செர்லின், தினேஷ் கண்ணன், சபரி வாசன்  ஆகியோர் தலைமையில், மாணவர்கள் வீடு வீடாக சென்று  தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர்  1 முதல் 7ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது, நோய்  தவிர்க்க ஊட்டச்சத்து அவசியம், துரித உணவுகளை அறவே  தவிர்க்க வேண்டும். அவ்வுணவுகளை அதிகம் சாப்பிட்டால்  புற்றுநோய் ஏற்படும், சத்தான உணவுகளை எடுத்துக் கொண் டால் சிறப்பான வாழ்வை நாம் வாழலாம், பாரம்பரியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், குழந்தை களின் வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் தேவை மிக முக்கியமாக கருதப்படுகிறது ஆகையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை  இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினர்.  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும்,  துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல் லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு2 ஒருங்கிணைப்பாளர்  மோகன்குமார் செய்திருந்தனர்.

கிணற்றிலிருந்து இளம் பெண் உடல் மீட்பு

உதகை, செப்.2- நீலகிரி மாவட்டம், ஊட்டி  அருகே பாத கண்டி பகுதியை சேர்ந்த ராம நாதன், இவரது மகள், விசித்திரா (23).   திருமணமாகவில்லை. வெள்ளிக் கிழமை காலை முதல் விசித்திரா வீட்டில்  காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.  இந்நிலையில், பாதகண்டி பகுதி யில் உள்ள குடிநீர் கிணற்றில் விசித்திரா வின் உடல் மிதந்துள்ளது. இதனை  அப்பகுதிமக்கள் மஞ்சூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடலை மீட்டு, உடற் கூறாய்வுக்கு ஊட்டி அரசு தலைமை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார்  கொலையா?, தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.