districts

img

பாஜகவுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 7- பாஜகவின் ஊழலுக்கு எஸ்பிஐ வங்கி துணை போவதைக் கண்டித் தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி  தேர்தல் பத்திர பட்டியலை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் நகரக்குழு  சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தேர்தல் பத்திர முறையை ரத்து செய் யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உட்பட சமூக நல அமைப்புகள் பல தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் பத்திர  திட்டம் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும், மக்க ளின் தகவல் அறியும் உரிமையை மறுக்கிறது. எனவே எஸ்பிஐ வங்கி தேர் தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் விப ரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர் தல் ஆணையத்திடம் அளித்திட வேண் டும் என உத்தரவிட்டது. இந்நிலையில்,  பாஜகவுக்கு துணை போகும் வகை யில் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப் பிக்காமல் உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி ஜூன் 30 வரை கால அவ காசம் கோரியுள்ளது. எஸ்பிஐ வங்கி யின் இந்த போக்கை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாக புதனன்று  15.வேலம்பாளையம் நகரக் குழு உறுப் பினர் அ.ஆறுமுகம் தலைமையில் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத் தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வங்கி நிர்வா கத்தையும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நகரக் குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், பி. சின்னச்சாமி, ர.கவிதா, ஆர்.சுகுமார், த. நாகராஜன், பி.ரகுபதி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.