சேலம், மார்ச் 27– தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சுற்று லாத் தலங்களில் ஒன்றான ஏற்காட் டில், பேருந்து நிலையம் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சற்றுலாப் பயணிகளும், பள்ளி மாணவ, மாணவியரும் வந்து செல் கின்றனர். பிரசித்தி பெற்ற கோடை வாஸ்தலமான ஏற்காட்டிற்கு, தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக ரித்துள்ளது. இந்நிலையில், ஏற்காடு பேருந்து நிலையத்திற்கு எதிர்புறத் தில், பேக்கரி மற்றும் உணவு கடை கள் உள்ளன. அந்த இடத்தில் கழிவுநீர் செல்லும் கால்வாய் தடைபட்டு, ஆறு மாதத்திற்கு மேலாக சரிசெய்யப்ப டாமல் உள்ளது. சுகாதாரத்துறை, மருத் துவத்துறையினரும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உடனடியாக, அந்த கழிவுநீர் கால்வாயை சரிசெய்யாவிட் டால் அபாயகரமான தொற்று நோய கள் பரவும் சூழ்நிலை ஏற்படும் என்று பலமுறை வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாதக்கணக்கில் கழிவுநீர் கால் வாய் திறந்து கிடப்பதால், கழிவுநீர் வெளியேறுகிறது. இது திருவிழா காலம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல், கழிவுநீரை மிதித்து செல்கின்றனர். இதனால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலாரா மற்றும் அபாயகரமான நோய்கள் பரவு வதோடு, அந்த 6 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில், குழந்தைகளோ, பொதுமக்களோ, சுற்றுலாப் பயணி களோ விழுந்து இறக்கக்கூடிய அபாய கரமான சூழ்நிலையும் நிலவுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் என்றுகூறி, கழிவுநீர் கால்வாயை சரிசெய்யாவிட் டால், மக்கள் மிகவும் பாதிக்கப்படு வார்கள். எனவே, இதுகுறித்து சம்பந்த பட்ட அதிகாரிகள் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள் ளனர்.