districts

img

தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு

தருமபுரி, ஜன.13- இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கருவூலக்காலனி யில் மாதக்கணக்கில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படா ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவதாக பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்கு அருகில் உள்ளது இலக்கியம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கருவூலக்காலனி, தீயணைப்பு  காவலர் குடியிருப்பு, அண்ணாநகர் ஆகிய பகுதிகள் உள் ளன. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலையில், மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள் ளது. இந்த சாலையோரம் ஊராட்சியின் மூலம் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி உள்ளது. மாதக்கணக்கில் குப்பை அல்லா ததால் குப்பைத்தொட்டி நிரம்பி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பைக ளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. இதுகுறித்து ஊராட்சிக்கு தெரிவித்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.