districts

img

சம்பள பாக்கி, 10 சதம் கூலி உயர்வு

நாமக்கல், செப்.17- சம்பள பாக்கி, 10 சதம் கூலி  உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை சிஐடியு தொழிற்சங்கத்தின் தொடர் முயற்சியால் விசைத்தறி தொழிலாளர்கள் வெற்றி  பெற்றுள் ளது.  நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தை அடுத்துள்ள மோட மங்கலம் கிராமம், வால்ராசம் பாளையம் பகுதியில் லோகு என்ப வருக்கு சொந்தமான விசைத் தறி கூடத்தில், 26 குடும்பங்களை  சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையாக கூலி வழங்கப்படவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிஐடியு தொழிற்சங்கம் தலையிட்டு உரிய நீதி பெற்றுத்  தர வேண்டும் என இத்தொழிலாளர் கள் கேட்டுக் கொண்டனர்.  இதையடுத்து சிஐடியு முயற்சி யில், மாவட்ட தொழிலாளர் உதவி  ஆணையர், காவல் துணை கண்கா ணிப்பாளர், வட்டாட்சியர், பள்ளி பாளையம் வருவாய் ஆய்வாளர், காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் சார்பில் எம். அசோகன், கே.மோகன் கே.குமார்,   விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் லோகநாதன், சதீஷ் குமார், பிரகாஷ் ஆகியோர் என நான்கு தரப்பினர் அடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை திருச் செங்கோடு கோட்டாசியர் அலுவ லகத்தில் சனியன்று மாலையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், விசைத்தறி உரிமையாளர் தங்க ளுக்கு முறையாக கூலி வழங்கா மல் அநாகரிகமான முறையில் பேசுகின்றனர். வேலைக்கான  கூலி   விபரங்களை நிர்வாகத்தினர் தெரி விப்பதில்லை.  விசைத்தறிக்கூட தில் மேனேஜராக பணியாற் றும் சித்திக் என்ற நபர் தொடர்ந்து  அநாகரிகமாக முறையில் பேசி  தங்களை அவமானப்படுத்துவ தாக தொழிலாளர் தரப்பில் புகா ராக தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து, விசைத்தறி கூடத்தில் பணியாற்றும் சித்திக் என்ற இளைஞரை பணியில் இருந்து நீக்குவதாக விசைத்தறி உரிமையாளர் லோகநாதன் உறுதி யளித்தார். பாதிக்கப்பட்ட தொழி லாளர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணமாக ரூ.10  ஆயிரத்தை உடனடியாக வழங் குவது,

நிலுவையில் உள்ள மூன்று  வார கால சம்பள தொகையினை சரி  பார்த்து தொழிலாளரிடம் ஒன்றாக வழங்கிட வேண்டும். மேலும், விசைத்தறி தொழி லாளர்களுக்கு ஜனவரி 1.1.2024  முதல் 10 சதம் கூலி உயர்வும்,  ஒன்ப தரை சதம் போனசும் வழங்க  வேண்டும். மற்ற விசைத்தறிக் கூடங்களில் வழங்குவது போல தொழிலாளரின் உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் விசைத்தறியில் தொழிலாளர்களை துன்புறுத்து வது, பழிவாங்கும் நடவடிக்கையோ அவமரியாதை செய்யப்படுவதோ கூடாது. தொழிலாளர் உடல்நிலை சரியில்லாத போது மற்றும் அத்தி யாவசிய தேவைகள் ஏற்படும் நேரங்களில் விடுப்பு வழங்க வேண்டும்.  இதுதொடர்பாக, தொழிலாளர் களிடையே குழு அமைத்து, தொழி லாளர்களின் குறைகளை குழு வினர் மூலம் நேரடியாக விசைத் தறி நிர்வாகத்திடம் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஆகி யோர் தொழிலாளர் நலன் குறித்து  ஆய்வு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டது.  கடந்த ஒரு வார காலமாக விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை சிஐடியு தொழிற் சங்கத்தின் முன்முயற்சியால் வெற்றியடைந்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக் கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி  உள்ளது. விசைத்தறி தொழிலா ளர்களுக்காக களத்தில் உறுதி யாக நின்ற சிஐடியு தொழிற்சங்கத் திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் பணிக்கு சென்றனர்.