districts

img

சமத்துவ பொங்கல் திருவிழா

திருச்செங்கோடு, ஜன.13 - திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் தந்தை பெரியார் சமத்து வபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா  மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறை மூலம் நடைபெற்ற நிகழ்வில்,  சமத்துவ பொங்கல் வைத்தும், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணி வித்து கௌரவித்தும் நிகழ்வுகள் நடைபெற்றது.  அகரம் ஊராட்சி மன்ற தலைவர்  எல்.லதாலட்சுமணகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சு. சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.விஜயா உட்பட முன் னிலை வகித்தனர். இதில், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர்   தமிழன்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புஷ்பராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தமிழரசி, ஊராட்சி ஒன்றிய அலு வலக செயலர் பிரபு  மற்றும் மகளிர்  சுய உதவிக் குழுக்கள், எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய மண்டல  அலுவலர்  தமிழன்பன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

முன்னதாக இந்நிகழ்வில், கோலப்போட்டி, இசை நாற்காலி, கும்மி பாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வத்துட பங்கேற்றனர். சுகாதார பொங்கல் விழா நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சி அலுவல கத்தில், சுகாதாரப் பொங்கல் மற்றும்  சமத்துவ பொங்கல் திருவிழா நடை பெற்றது.  இந்நிகழ்வில் பொங்கல் வைக் கப்பட்டு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அதிகாரிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதில், நகர்மன்ற தலைவர் மோ. செல்வராஜ், நகர் மன்ற துணை தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் ரேணுகா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகையில்லா போகி பண்டி கையை கொண்டாடுவதை வலியு றுத்தி, தூய்மைப்பணியாளர்கள் மக்களிடம் நேரடியாக சென்று, பழைய பொருட்களை பெற வேண்டு மென நகர மன்ற தலைவர் மற்றும்  துணைத் தலைவர் வலியுறுத்தி  பேசினர். இதில், ஏராளமானோர்  பங்கேற்றனர்.