அவிநாசி, ஆக.17- அவிநாசி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், குட்டகம் ஊராட் சிக்கு உட்பட்ட திருமலை கவுண்டம்பாளையம் அரசு உயர்நி லைப்பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபை கூட் டம் நடைபெற்றது. இதில் குட்டகம் ஊராட்சி மன்றம் சார்பில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றி ணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் ஊராட்சிமன்றத் தலைவர் புவனேஸ்வரி செந்தில் குமார், தூய்மைப் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.