தருமபுரி, ஜூலை 7- தருமபுரி அருகே உள்ள பாடி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லா ததால் பொதுமக்கள் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். அனைத்து சமூகத்தி னரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் 1997 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங் கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து ஒன்றி யங்களிலும் ஒரு பெரியார் சமத்துவபுரம் நிறுவி 100 வீடுகள் அமைத்து, இட ஒதுக் கீட்டிற்கு ஏற்ப வீடுகளை ஒதுக்கீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி அருகே பாடியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. தற்போது மக்களுக்கு அடிப்படை வசதிகள் இன்றி உள் ளனர். குறிப்பாக இப்பகுதியில் மரணம டைந்தவர்கள் அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை. இதனால் அருகாமையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யும் நிலை உருவாகி உள்ளது. சமத்துவபுரத்தில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நூலகம் இல்லை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை, போதிய தெரு விளக்கு வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாடி சமத்துவபுரத்திற்கு ஒகே னக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடி நீர் விநியோகம் செய்யவேண்டும். சமுதாயக் கூடம், தெருவிளக்கு, சமத்துவபுரத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். அடிப் படை வசதிகள் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை சமத்துவபுர குடியி ருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.