districts

img

மண் பானை விற்பனை கணிசமாக உயர்வு

பள்ளிபாளையம், ஏப்.28- பள்ளிபாளையத்தில் மண் பானை விற்பனை அதிகரித்து வரு கிறது. தமிழ்நாடு முழுவதும் வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதனால் மக்கள்  மண் பானைகளை பயன்படுத்த ஆர்வத்துடன் வாங்கி செல்கின் றனர். குழாய் தண்ணீர் அல்லது ஆற்றுத்தண்ணீரை வடிகட்டி சுத்த மாக்கி பயன்படுத்த வேண்டும். ஆனால், பானைத் தண்ணீரைப் பொறுத்தவரை நாமே நமது கண் காணிப்பில் சுத்தமான தண்ணீரை பானைக்குள் ஊற்றுகிறோம். தண்ணீரில் உள்ள சில கிருமிகளை மண்பானையில் உள்ள சுடு மண் ஈர்த்து சுத்தமாக்கி விடுகிறது. இதனால், பானைத்தண்ணீர் மிகவும் சுவையாகவும், தாகத்தை அடக்கக்கூடியதாகவும் இருக்கும். மிக முக்கியமாக மண்பானையில் உள்ள சிறுசிறு துளைகள் வழி யாக இயற்கையாகவே நீர் ஆவி யாகிவிடும். இதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாகவும் நாம்  குடிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். கோடை காலங்களில் பானைக்குள் வெட்டி வேர் அல்லது  விலாமிச்சு வேர் போட்டு இரவு முழு வதும் வைத்திருந்து காலையில் குடித்தால் தண்ணீர் மிகவும் சுவை யாக இனிக்கும்.

மேலும் கோடை கால நோய்களான வேர்க்குறு போன்றவை வராது.   இதுகுறித்து மண் பானை விற் பனையாளர் கூறுகையில்,   கடந்த  சில வருடங்களுக்கு முன்பு பள்ளி பாளையத்தில் பல்வேறு இடங் களில் பானை விற்பனை செய்யும் கடைகள் இருந்தன. தற் போது கால சூழல் மாறி வரும் நிலை யில், குளிர்ச்சியான குடிநீரை பருகு வதற்கு குளிர்சாதனப்பெட்டியை மக்கள் பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தேவை குறைந் ததால் மண் பானை விற்பனை செய்யும் கடைகள் சொற்பமாக சுருங்கி விட்டது. மேலும், புதிதாக பானை தயா ரிப்பில் ஈடுபடக்கூடியவர்கள் பள்ளி பாளைத்தில் இல்லை. இதனால் பானைகளை சேலம் உள்ளிட்ட தொலைதூரப் பகுதியில் இருந்து ஆர்டர் கொடுத்து வாங்கி வரு கிறோம். மண் பானைகளை பராம ரிப்பது கடினமான விஷயம் என்ப தால், அதிகமான பானைகளையும் வாங்கி வைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது சிறிய பானை  ரூ.150, பெரிய பானை ரூ.400 முதல்  ரூ.500 வரை விலை நிர்ணயத்து விற்பனை செய்கிறோம். பெரிய  அளவுக்கான வியாபாரம் இல்லா விட்டாலும், பானை தண்ணீர் குடிப் பதின் மகத்துவத்தை அறிந்தவர் கள் மட்டுமே மண் பானைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும், மண் பானைகளில் புதிய வடிவமாக குடிநீர் குழாயை இணைத்து வரும் பானைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனை பார்க்க நூதனமாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதால், அந்த வகை பானை களையும் பொதுமக்கள் விரும்பி  வாங்கி செல்கின்றனர். தற்போது கோடை வெயில் கொளுத்தி வரு வதால், விற்பனை கணிசமான அளவு அதிகரிப்பதாக தெரிவித் தார். தமிழ்நாட்டில் பாரம்பரியமான மண்பானை தொழிலை, மண் பானை தொழிலாளர்களை, பாது காக்க தமிழ்நாடு அரசு தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது.