ஈரோடு, ஜூன் 3- பஞ்சு பதுக்கலையும், ஏற்றுமதியையும் தடுத்து செயற்கையான விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சளை போன்று ஜவுளித்தொழிலும் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளி தொழிலை நம்பி ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோ கபுரம், சித்தோடு, காஞ்சிகோவில், மொடக் குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்தியில் 40 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தயாராகிறது. இந்நி லையில், கொரோனா தொற்று தாக்கம் கார ணமாக விசைத்தறிகள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதேபோல் ஜவு ளித்தொழிலும் கடும் பாதிப்பை சந்தித்தது. இதில், இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த ஜவுளி மற்றும் விசைத்தறிகள் தற்போது பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நூல் விலை உயர்வு காரண மாக ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத் தறி, உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந் தித்து வருகிறார்கள். வரலாறு காணாத பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஸ்தம்பித்து நிற்கிறது ஜவுளித்துறை. 45 ஆயிரம் ரூபா யாக இருந்த ஒரு கண்டி பஞ்சு தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை உயர, அதற்கேற்ப நூல் விலையும் கடுமையாக உயர்ந்து ஜவுளி வணிகத்தை நிலைகுலைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு 180 ரூபாய்க்கு வாங்கிய 1 கிலோ நூல் தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தாறுமாறான நூல் விலையேற்றத்தால் தடுமாறிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர். மேலும், படிப்படியாக உற் பத்தியை குறைத்த ஜவுளி உற்பத்தியாளர் கள், ஒருகட்டத்தில் பெரும் இழப்பை தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ் வாறாக, ஈரோடு பகுதியில் மட்டும் தொழிலை தொடர முடியாமல் கடந்த 7 மாதத்தில் மட்டும் 5 ஆயிரம் விசைத்தறிகளை விற்பனை செய்யப் பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவலை விசைத்தறி யாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விசைத்தறிகள் விற்பனைக்கு சென்ற தால், அவை இயங்கி வந்த கூடங்கள் (குடோன் கள்) காலியாக கிடக்கின்றன. பாதி வாடகைக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் அவற்றை பூட்டி வைத்துள்ளனர் உரிமையாளர்கள். விசைத் தறி கூடங்கள் நிறைந்த ஈரோடு, வீரப்பன்சத் திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், சித் தோடு போன்ற பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட கூடங்கள், வாடகைக்கு என்ற வாசகத்துடன் பதாதைகளை ஏந்தி நிற்கின்றன. தலைமுறை தலைமுறையாக நெசவு தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்கள் தற்போது வாழ்வா தாரத்தை இழந்து வருகின்றனர். பஞ்சு பதுக்க லையும், ஏற்றுமதியையும் தடுத்து செயற்கை யான விலையேற்றத்தை மத்திய அரசு கட்டுப் படுத்த வேண்டும் என்று ஜவுளி மற்றும் விசைத் தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.