districts

img

ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக சேலம் இருக்கும்

சேலம், பிப்.3- ஆதரவற்றோர் இல்லாத மாவட்ட மாக சேலம் இருக்கும் என மாவட்ட  ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள் ளார். தெரு வாழ்வோர் மறுவாழ்வு திட் டத்தை விரிவுபடுத்த “ஆட்சியர் மையம்” என்னும் திட்டத்தை சேலம் மாவட்ட முன் னாள் ஆட்சியர் செ.கார்மேகம் துவக்கி வைத்தார். தெரு ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற மக்களை மீட்டு, அரசு மருத் துவமனைகளில் சேர்த்து பராமரிக்கப் பட்டு, ஆதரவற்றோர் காப்பகத்தில் கொண்டு சென்று விடும் திட்டமாக இது செயல்பட்டு வருகிறது. இப்பணி கள் சேலம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களான போதிமரம் சேவகன், நுகர்வோர் பாதுகாப்பு இயக் கம், பாரதியார் மக்கள் நல்வாழ்வு மையம் உள்ளிட்ட அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதத் தின் முதல் சனிக்கிழமை தொண்டு  நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் தெருவில் ஆதரவற்று இருக்கும் மக் களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த னர். இரண்டு ஆண்டுகளாக செயல் பாட்டில் உள்ள இந்தத் திட்டத்தை தற்போது புதிதாக பொறுப்பேற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா  தேவி, இப்பணிகளுக்கு முக்கியத்து வம் அளித்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனத்திற்கு இடையே கலந்துரையாடினார். ஆதரவற்றோர்கள் இல்லாத மாவட் டமாக சேலம் இருக்க மாவட்ட நிர் வாகமும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் அலர்மேல் மங்கை, பாரதியார் மக்கள் நல்வாழ்வு மைய நிர்வாகி தேவிகா, நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி பூபதி, சமூக நலத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண் டனர்.