சேலம் சிறை தியாகிகள் நினைவக வளாகத்தில் தமுஎகசவின் சேலம் மு.கலையரசன், க.ஆஷா ஆகியோரின் இணை ஏற்பு விழா காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து எவ்வித சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடைபெற்றது. இதில், தமுஎகச மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மேட்டூர் வசந்தி, மாவட்ட செயலாளர் ஜி.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.