சேலம், நவ.21- சேலத்தில் புத்தக திருவிழா வினை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா 2022 புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் தொடங்கியது. 210 அரங்குகளுக்கு மேல் அமைக் கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்த கங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், முன்னணி பதிப்புகளின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. கதை, கவிதை, நாவல், கட்டுரை, அரசியல், தலை வர்களின் வரலாறு உள்ளிட்ட புத்த கங்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவை கள் அரங்குகளில் நிறைந்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்பெறும் வகை யில் போட்டி தேர்வுக்கான புத்தகங் கள் என ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்று இருந்தது. இதனை பள்ளி, கல்லூரி மாணவி கள் மற்றும் மாணவர்கள் பொதுமக் கள் என ஏராளமானோர் இந்த புத்த கத் திருவிழாவில் பார்த்து புத்தகங் களை வாங்கி சென்றனர். ஞாயிறன்று தொடங்கிய இந்த கண்காட்சி 10 நாட் கள் வரை நடைபெற உள்ளது. ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தா ளர்கள், பதிப்பாளர்கள் தலைமை யில் கருத்தரங்கு வினாடி, வினா உள் ளிட்ட போட்டிகளும் நடைபெற உள் ளது. மேலும், இந்த புத்தகத் திருவிழா வில் வாசிப்பாளர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாத வகையில் புதிய பேருந்து நிலையத்திற்கு அதிக ஒலி எழுப்பும் வகையில் உள்ள ஹேர் ஹார்ன் ஒலி எழுப்ப தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் வாகனம் மீது வழக்கு பதிவு செய்ய வும் காவல்துறை சார்பில் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.