districts

img

சேலம்: சீமா பவானி குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

சேலம் மார்ச் 26- பெண்கள் அதிகாரத்திற்கு திரளாக வர வேண்டும்  என வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொண்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை பெண்கள் சிறப்பு பிரிவு படையை சார்ந்த  சீமா பவானி குழுவினருக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது.  இந்திய எல்லை பாதுகாப்பு படை சிறப்பு பெண் கள் பிரிவை சேர்ந்த பெண் வீரர்கள், பெண்கள் சமூக அதிகாரத்திற்கு அதிக அளவில் பங்கேற்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்  வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சீமா பவானி என்ற பெயருடன் இந்தி யாவின் தலைநகரம் தில்லி முதல் கன்னியாகுமரி வரை இரண்டு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று தில்லியில் துவங்கிய இந்த வாகன பிரச்சார இயக்கம் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தது. இவர்களை சேலம் நால் ரோடு பகுதியில் உள்ள சாமுண்டி ராயல் என்ஃபீல்ட் நிர்வாக இயக்குனர் வாசுதேவன் தலைமை யில் தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மலர் மாலை அணிவித்தும்,மலர் செண்டு வழங்கியும் வர வேற்றனர். இந்நிகழ்வில் வீரர்களின் குழுவை வழி நடத்தும் கமாண்டர் முகேஷ் வர்மா, துணை கமாண்டர் டாக்டர் ரான்சு ரெய்னா உள்ளிட்டு சீமா பவானி குழு வைச் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.