districts

img

“நீர்வழிப்படூஉம்” நாவலுக்கு சாகித்யா அகாடமி விருது

திருப்பூர், டிச.27- திருப்பூர் மாவட்டத்தைச்  சேர்ந்த எழுத்தாளர் தேவிபா ரதி என்.ராஜசேகரன் எழு திய “நீர்வழிப்படூஉம்” என்ற  நாவலுக்கு சாகித்யா அகா டமிவிருது  அறிவிக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியா கும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஒன்றிய அரசின் சார்பில் எழுத்தாளர் தேவிபாரதி என்கின்ற என்.ராஜ சேகரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான விருதுக்கு ராஜசேகரன் எழு திய ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதைதொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், புது வெங்க ரையாம்பாளையத்தில் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், செவ்வா யன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரனை நேரில் சந் தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.