districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

சேலம், செப்.13- காலியாக உள்ள அனைத்து நிலை யிலான பணியிடங்களையும் உடனடி யாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் காலவரையற்ற வேலை நிறுத் தப் போராட்டத்தை புதனன்று துவங் கியுள்ளனர். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு  நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரி மைகளையும், ஊராட்சி செயலாளர் களுக்கு வழங்க வேண்டும். சட்ட மன்ற அறிவிப்பின்படி பணி விதி களை உடனடியாக வெளியிட வேண் டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட செயலாக்கம் காரணமாக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது மேற்கொள் ளப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை கள் மற்றும் விழிப்புத்துறையின் நடவ டிக்கைகள் அனைத்தையும் கைவிட வேண்டும். அரசாணை 54யை திருத் தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தினர் புதனன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் ஊராட்சி, ஏற்காடு,  ஆத்தூர், ஓமலைர், காடையாம்பட்டி  உள்ளிட்ட 20 ஊராட்சி ஒன்றியங்களி லும் ஊழியர்கள் பணிக்கு வர வில்லை. இதனால், அனைத்து பணி களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலு வலகத்திலும் ஊழியர்கள் வராத தால் அரசின் மொத்த பணிகளிலும்  தொய்வு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நிவர்த்தி செய்ய வேண்டும்  என சங்கத்தின் மாநில துணைத்தலை வர் ந.திருவேரங்கன், மாவட்டச் செய லாளர் ஜான் ஆஸ்டின், மாவட்டத்  தலைவர் பி.ஜே.கண்ணன் ஆகி யோர் கேட்டுக்கொண்டுள்ளனர். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் 494 ஊழி யர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதனி டையே புதனன்று முதல் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பகுதி ஊழி யர்கள் பணிக்கு செல்லவில்லை. இத னால் காரிமங்கலம், பாலக்கோடு, ஏரியூர், பென்னாகரம், தருமபுரி, அரூர்  உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் பூட்டி கிடந்தன.