districts

img

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் தின் காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் தின் காத்திருப்புப் போராட்டம் 2 ஆவது நாளாக புதனன்றும் தொடர்ந்தது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். மின்  ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இதில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.குட்டியப்பன், பொருளாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.