districts

img

உரிமைகளற்ற தூய்மை பணியாளர்கள் ஆவேசமடைவதற்குள் ஆட்சியாளர்கள் சரி செய்ய வேண்டும்

உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்  பணிகளில் முக்கிய மானது பொது சுகாதாரம். குப்பை களை அகற்றுதல், கழிவு நீர் அகற்று தல், டெங்கு, மலேரியா கொசுப் புழுவை அழித்தல் மற்றும் திடக் கழிவு மேலாண்மை செய்வது ஆகும். நிரந்தர தன்மை வாய்ந்த இப் பணிகளைச் செய்து வந்த தொழி லாளர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டனர்.  தற்போது, இந்த நிரந்தரப் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி,  மாநகராட்சி மற்றும் பேரூராட்சி  நிர்வாகங்களே இத்தொழிலாளர் களை பணியமர்த்தியது. சம்பள மும் வழங்கி வந்தது. பின்னர் இவர் கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். ஒரே வேலையைச் செய்தாலும், திறனற்ற தொழிலாளி என வகைப்படுத்தப்பட்டனர். தினக் கூலி, ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர்.   இத்தொழிலாளர்களுக்கு மாநில அரசு தீர்மானிக்கும் குறைந்த பட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங் கப்படுவதில்லை. இதற்கு நிகராக மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் செயல்முறை ஆணைகளில் தீர் மானிக்கும் ஊதியத்தையும் வழங்கு வதில்லை. அகவிலைப்படி கணக் கில் கொள்ளப்படுவதில்லை. வைப்புநிதி திட்டம் அமலாவ தில்லை. அதற்கான தொகை பிடித்தம் செய்யப்பட்டாலும், நிர் வாகத்தின் பங்கும் தொழிலா ளியிடமே பறிக்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகையை  உரிய அலுவலகத்தில் செலுத்துவ தில்லை. சில இடங்களில் செலுத்தப் படுகிறது என்றாலும், அதற்கான  எண்கள், கடவுச்சொல் எதுவும்  தொழிலாளிக்கு அளிக்கப்படுவ தில்லை. தனது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்றோ?, அதி லிருந்து கடன் பெறவோ வாய்ப்ப ளிக்கப்படுவதில்லை.

இஎஸ்ஐ மருத்துவ திட்டத்திலும்  இதே நிலை தான். தொழிலாளி மட்டு மின்றி அவரின் குடும்பத்தினரும் இதில் மருத்துவம் பார்க்க இயலும்.  தொழிலாளிக்கு உடல் நலம் குன்றி சிகிச்சை பெறுவாரேயானால், வேலைக்குச் செல்லாமல் சிகிச் சைக் காலத்திற்கு ஊதியமும் பெற  முடியும். இந்த வாய்ப்பும் தூய்மை  பணியாளருக்கு மறுக்கப்படுகிறது. பொது சுகாதார பிரிவில் மருத்துவ அலுவலர் இருப்பார். சுகா தார ஆய்வாளர் இருப்பார், மேற் பார்வையாளர் இருப்பார். தூய்மை  பணியாளர்கள் மற்றும் திறனற்ற  தொழிலாளர்கள் என வகைப்ப டுத்தப்பட்டு, நாள்தோறும் பணி  ஒதுக்கீடு செய்யப்படும். அவர்களது  பணி மேற்பார்வை செய்யப்படும். முதன்மை வேலையளிப்பவர் உள் ளாட்சி நிர்வாகம் தான் என்றாலும் மாநகராட்சியோ, நகராட்சியோ மற்றும் பேரூராட்சி நிர்வாகமோ அவர்களுக்கு நேரடியாக ஊதியம்  வழங்காது. அல்லது தொழிலாளி யின் வங்கிக் கணக்கிலும் செலுத் தாது. ஒப்பந்ததாரிடமே வழங்கும்.  அவர்கள் பிரதி மாதம் 5ஆம் தேதிக் குள் அல்லது முதல் வாரத்தில் தொழிலாளிக்கு ஊதியத்தை அளிக்க வேண்டும். ஆனால் இந்த  நடைமுறை பெரும்பாலும் கடைப் பிடிக்கப்படுவதில்லை. மாதத்தின்  இரண்டாவது, மூன்றாவது வாரங் களில் தான் வங்கி கணக்கில் செலுத் தப்படுகிறது.

ஊதியம் பெறுவதில் மேலும் தாம தமாகும். பொது சுகாதாரப் பிரிவில்  தனியார் மயம் புகுத்தப்பட்டுள்ள தால் குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்த தாரர் மாற்றப்படுகிறார். அவர்  ஊதியத்தை கொடுக்காமல் சென்று  விடுவார். அது தெரியாமல் தொழி லாளர்கள் உள்ளாட்சி நிர்வா கத்தை நாடுவர். அங்கு முறையான  பதில் அளிக்காமல் அலட்சியம்  செய்யப்படுகின்றனர். அத்துடன்  கேள்வி கேட்பவர் பழி வாங்கப் படும் நிலையும் உள்ளது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில், உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்கள் தூய்மைப்பணி தொழிலாளர்கள். ஆகவே, அரசு இவர்களை முன் களப்பணியாளர்கள் என அறிவித்து  சில சலுகைகளை அறிவித்தது. பல  இடங்களில் பொதுமக்கள் தூய் மைப்பணி தொழிலாளர்களை மாலை போட்டு மரியாதை செய்து கௌரவித்த சம்பவங்களும் நடை பெற்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தூய்மைப்பணி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, உரிமைகளற்றவர்களாக, அத்தக்கூலிகளாக மாற்றுவது, அழகல்ல.  ஆங்காங்கே உரிமைகள் மறுக் கப்பட்ட தூய்மைப்பணி தொழிலா ளர்களின் போராட்டங்களும், முழக் கங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுந்து கொண்டிருக்கிறது. இது  மொத்தமாய் திரண்டு ஆவேசம டைவதற்குள் ஆட்சியாளர்கள் பறித்த உரிமைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

- சக்திவேல்.