districts

img

ஆர்எஸ்எஸ், பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும்

கோவை, அக்.9- இந்துக்களின் நம்பிக்கை யாரும் கொச்சைபடுத்தவில்லை. இந்துக ளுக்கு எதிராக திசை திருப்பி, எதிரி களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத் தைப் பயன்படுத்தும் ஆர்எஸ்எஸ், பாஜ கவினரை இந்து மதத்தை காக்க நினைக் கும் மாடாதிபதிகள் அழைத்து செவி லில் அறைய வேண்டும் என தொல்.திரு மாவளவன் வேண்டுகோள் விடுத்தார். கோவை சிவானந்தாகாலனியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  முன்னாள் ஒன்றிய அமைச்சர் பா.சிதம் பரம், தமிழக மின்துறை அமைச்சர் செந் தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி  தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ் வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

சாதி ஒழிந்தால் தான் சானாதனத்தை ஒழிக்க முடியும்

இதில், முன்னாள் ஒன்றிய அமைச் சர் பா.சிதம்பரம் பேசுகையில், பேராடி போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியா சானம் போட்டு அமர்ந்துள்ளார் திரு மாவளவன். நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். 75 ஆண்டு காலம் சுதந் திரம் தினம் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், முழுமையாக 130 கோடி மக்க ளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடாவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பி டம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக் கவில்லை. பழங்குடியினர், சிறுபான் மையினர் இன்னும் முழு சுதந்திரம்  கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கருப்பின மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாலக போராடி வருகின்றனர். நம்மு டைய நாட்டில் என்னுடைய வாழ்நாள்  பிறகு இந்த போராட்டம் இருக்கும். அண் ணாமலைக்கும், திமுக இராசவிற்கு இடையே நடக்கும் விவாதம் மட்டும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியா வில் கிடைக்கவில்லை  அது கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும். சனா தனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர் கள் பார்த்து பரிதாபம் படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், சாதிகளையும் அழிக்க போராட வேண் டும். காந்தியை மதிக்கிறேன், ஆனால் சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்ற தாழ்வை கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிய வேண்டும். தடையாகவும், சுவராகவும் சாதி உள் ளது. சாதி ஒழிந்தால் தான் சானாதனம் ஒழிக்க முடியும். சனாதனத்தை ஒழிக் கும் போராட்டத்தில் திருமாவின் தலை மையில் செல்ல தயார், என்றார். 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாஜகவின் கடைசி தேர்தல்

இந்நிகழ்வில் பங்கேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தமி ழக முதல்வருக்கு தம்பியாக தொல். திருமாவளவன் இருக்கிறார். ஒடுக்கப் பட்ட மக்களின் உரையாக சட்டமன்றத்தி லும், நாடாளுமன்றத்தில் பேசி வருகி றார். நோட்டாவுடன் போட்டி போடுபவர் கள் கோவையில் 100க்கு பூஜ்ஜியம். அரவகுறிச்சியில் ரூ.1000 பணம் கொடுத்து போட்டி போட்டார்கள்.  மக்கள் கர்நாட காவிற்கே திரும்பி போ என மக்கள்  பதில் அளித்தார்கள். வெற்று விளம் பரத்தையும் சமூக வலைதளங்களை  மட்டும் நம்பி அவதூறு பரப்பி வருகிறார் கள்.  சமூக வலைதளங்கள் எல்லாம் ஒட் டாக மாறது. ஒட்டு வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் என பாஜகவை கடு மையாக சாடினார்.  மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40/40 நாம்  வெற்றி பெறுவோம். நீலகிரி, பொள் ளாச்சி, கோவை நாடாளுமன்ற தொகுதி களில் நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட் டும் தான் ஜெயிக்கிறோம். திருமாவின் சொல்லும், செயலும் நூறு ஆண்டுகால் கடந்தும் நிமிர்ந்து நிற்கும். வருகின்ற  நாடாளுமன்ற தேர்தல் பாஜகவின் கடைசி தேர்தலாக தமிழகத்தில் அமையும், என் றார்.  இதனைத்தொடர்ந்து தமிழக வாழ் வுரிமை கட்சியின் தலைவர் வேல்முரு கன் பேசுகையில், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக தோன்றிய தலைவர் தான் திருமாவளவன். அவமானங்களையும், அசிங்கங்களையும் கடந்து அரசியலில் உயர்ந்துள்ளார். பல சமுதாயங்களை சேர்ந்தவர்கள் திருமாவை பின் தொடர் கிறார்கள். கத்தி, கம்பு எதையும் கையில் எடுக்காமல் அரசியலை ஒழுங்கு படுத்து கிறார். சாதிய மிடுக்குடன் இருந்தவர் கள் இன்று திருமாவை பார்த்து சல்யூட் வைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார், என்றார்.

நிறைவாக தொல்.திருமாவளவன் ஏற்புரையாற்றி பேசுகையில், 60 வயதை எட்டியதை அரசியல் கருத்துகளை இணைக்கும் விழாவாக நடத்த திட்ட மிட்டோம். கடந்த பிறந்தநாள்கள் எல் லாம் சமூக பிரச்சனையின் கருத்துகளை வைத்து கொண்டாடினோம். மதிப்புக் குரிய சங்கிகள் இந்த கருத்தை கொடுத் துள்ளனர். அதை 60 வது பிறந்தநாளில் கருவாக கொண்டாடி வருகிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனிமைபடுத்துவோம். காந் தியடிகளை குறைத்து மதிப்பிட வில்லை அவர். தேச தந்தை காந்திக் கும், அம்பேத்கருக்கு இடையிலான கருத் தியல் மோதல் இது. இன்று மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதற்கு நாம் சங்கி களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்துக்களின் நம்பிக்கை யாரும் கொச் சைபடுத்தவில்லை. இந்துகளுக்கு எதி ராக திசை திருப்பி வைப்பது மட்டுமின்றி எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்ற னர். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தை காக்க நினைக்கும் மாடாதிபதி கள், ஆர்எஸ்எஸ், பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும். காந்தியை சிறுமைபடுத்தி பார்க்க பட்டேலுக்கு சிலை வைக்கிறார் கள். காந்தியை வணங்குகிறார்கள், கோட் சாவிற்கும் வீர வணக்கம் போடுகிறார் கள். என்னவொரு நடிப்பு. கருத்தியல் ரீதியாக இவர்களுக்கு ஒரே எதிரியாக  இருப்பவர் அம்பேத்கர் தான். அவர்கள் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அதை வடிவமைத்த வர் அம்பேத்கர். இந்தியாவில் இரண்டு இனம் தான். ஒன்று ஆரியன், மற்றொன்று திராவிடன். மோகன் பகவத் சொல்லும் சாதியும், மதமும் மறந்துவிடு என்கிறார் மதமும், சாதியும் மறந்து விடுவதல்ல வேரோடு அழித்து எரிய வேண்டும்  தமிழிசை அக்காவை, பொன்னாரை சங்கர மடத்தில் உட்கார வைக்க முடி யுமா? சாதியும், மதமும் இல்லை என  எப்படி சொல்ல முடிகிறது. ஒரே ஒரு  நாள் விவசாயிகவும், செருப்பு தைப்ப ராகவும், மீன் பிடிப்பவராகவும் இருக்க  முடிமா? உடல் உழைப்பு இல்லாமல்  பருப்பும், நெய்யும் பாதுகாப்பாக சாப்பி டுவது எப்படி. என்னை உழைக்க  சொல்கிறது சனாதனம், மோகன் பக வத் கைகளில் கடப்பாரை பார்த்து  உள்ளீர்களா? தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார்கள். அண்ணாமலை என்கிற சூத்திர இந்துவை வைத்து வால் ஆட்டுகிறார்கள். எச்.ராஜா என்கிற பிரா மனரை வைத்து வால் ஆட்ட முடிய வில்லை. அங்கு பெட்ரோல் குண்டு விசு பவர்கள் இவர்கள் தான். ஆனால்  குற் றத்தை பெரியார் அமைப்புகள் மீது  போடுகிறார்கள். 54 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்கிறார்கள். எதற்கு விலைவாசி உயர்வை எதிர்த்தா? தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்றவா? இவர்கள்  கையில் ஆட்சி கிடைத்தால் இந்துகளை  யார் காப்பாற்றுவார்களா? அப்பாவி இந்துகளுகாக தான் நாம் குரல் கொடுக் கிறோம். அதிமுகவினர் பாஜகவுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள் எம்ஜிஆர் மீதும், மோடியா லேடியா சாவல் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு  வைத்தால் பாஜகவை கைவிட வேண் டும். நாளையே அறிக்கை விட வேண் டும். முன்னதாக திருமாவளவன் மணி  விழாவையொட்டி மலர் வெளியிடப்பட் டது. இதில், ஏராளமானோர் பங்கேற்ற னர்.