districts

img

ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.21 ஆயிரம் கோடி கொள்ளை: கி.வீரமணி சாடல்

உடுமலை, ஏப்.6- ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கையும் விட்டுவைக்காத மோடி, அந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ்  இல்லையென்று ரூ. 21 ஆயிரம் கோடி களை கொடூரமாக பறிமுதல் செய்துள் ளதாக திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி சாடினார். பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, திரா விடர் கழகத்தின் சார்பில் உடுமலை தாஜ் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிறப்பு விருந்தினராக திரா விட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், நாடாளு மன்ற தேர்தல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் என நாம் போராடி வருகிறோம். ஆனால் ஒன்றிய பாஜக அரசு, வருமான வரித்துறை, அம லாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அரசின் அமைப்புகளை பயன்படுத்தி பெரும் நிறுவனங்களை மிரட்டி, தேர் தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் ஏமாந்தால், இந்தியா வில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடி யாது. ஒரு பக்கம் பாசிசம், இன்னொரு பக்கம் மலை போல ஊழல்கள் செய்த  மோடி அரசை, நாம் அனைவரும் ஒற்று மையாக இருந்து வீழ்ந்த வேண்டும். இந்த தேர்தலில், 11 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் ஓட்டு  செலுத்த இருக்கிறார்கள். அவர்கள் 2014 முதல் 2024 வரை மோடி என் னென்ன பொய்களை சொன்னார்.  வேலை வாய்ப்பில் இளைஞர்களுக்கு செய்தது என்ன? என்பதை அறிந்து வாக் களிக்க வேண்டும். என்னதான் வட நாட்டு ஊடகங்கள் தவறான தகவல் களை பரப்பி வந்தாலும், பாஜக ஆட் சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டார் கள் என்பது தான் உண்மை. நாட்டில் நடந்த 19 தேர்தல்களில் 2  தேர்தல்கள் தான் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை. ஒன்று நெருக்கடி நிலை  அறிவிக்கப்பட்ட காலத்தில் நடைபெற் றது. அப்போதும் தேர்தல் ஆணையம் இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அதை வளைக்கவில்லை. தற்போது  அறிவிக்கப்படாத நெருக்கடி காலம், தேர்தல் ஆணையமும் வளைக்கப்பட் டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்களை நம்புகிறோம். அத னால் சிந்தித்து வாக்களிக்க வேண் டும்.  கருப்பு பணத்தை பறிமுதல் செய்து  ஒவ்வொரு வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்ன மோடியின் உத்தரவாதத்தை நம்பி, ஏழை, எளிய மக்கள் வங்கி கணக்கை தொடங்கினர். அதையும் விட்டுவைக் காத மோடி, அந்த கணக்குகளில் மினி மம் பேலன்ஸ் இல்லையென்று ரூ.21 ஆயிரம் கோடிகளை கொடூரமாக பறி முதல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி மணிப்பூர் கலவரத்தை கண்டு கொள்ள மால் இருந்தது போல் வெள்ளப் பெருக்கால் தமிழகம் தத்தளித்த போதும்,  ஒன்றிய அரசு எவ்வித நிவாரணமும் வழங்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதை நாம் மறந்திறக் கூடாது.  எனவே, இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி கட்சியின் ஆதரவு பெற்ற, பொள்ளாச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என  பேசினார். இப்பிரச்சாரக்கூட்டத்திற்கு திரா விடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் க. கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ், திமுக தெற்கு மாவட்டச் செயலா ளர் பத்மநாபன், நகரச் செயலாளர் சி. வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், நகரச் செயலாளர் தண்டபாணி, காங்கிரஸ் நகரத் தலை வர் ரவி, மதிமுக மாவட்டச் செயலாளர் தமிழரசு, விசிக தெற்கு மாவட்டச் செய லாளர் சதிஸ்குமார் மற்றும் இந்திய கூட் டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.