districts

கல்விக்கடன் வழங்க கோவைக்கு ரூ.400 கோடி இலக்கு

கோவை, அக்.6- மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க கோவை மாவட்டத்திற்கு ரூ.400 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள்  லோசனை நடத்தினார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களிடம் கூறு கையில், கோவை மாவட்டத்தை பொறுத் தவரை சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்சோ வழக்குகள் அதிக மாக பதிவாகி வருகிறது. இதனை தடுப் பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்து வது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மற்றும் மாதம் ஒருமுறை பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களை தடுக்க கூட்டம் நடத்த அறிவுறுத் தப்பட்டது. மனித - வனவிலங்கு மோதல் களை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. காட்டுப்பன்றி பிரச்சனையை சட்ட ரீதியாக அணுக வனத்துறை அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு நலத்திட்டங்களை செயல்படுத்து வதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு துறைகள் 5 முதல் 10 ஆவது இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையில் “ஸ்டெப் சர்வே” இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கு நோக்கி சென்று வருகிறோம். பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் தவிர்ப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வருடம் 3 முதல் 4 இறப்பு பதிவாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள் ளது. இதனை அனைத்து வகையான பயனாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனை கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. “கோவைக்கான மாஸ்டர் பிளானை” அரசுக்கு சமர்ப்பித்துள் ளோம்.

இதற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக் கும் என நினைக்கிறேன். மண்டல அளவி லான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஆக்கிரமிக் கப்பட்ட அரசு நிலம் மீட்பு அதிகளவில் நடந்து வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தில் தற்போது வரை கைய கப்படுத்தப்பட்ட நிலங்கள் விமான நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டது. மீதமுள்ள 20 முதல் 30 ஏக்கர்  வரையிலான நிலங்களை கையகப் படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடி யும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பாதுகாக்க வேலி அமைக் கப்படும். கோவை மேற்கு புறவழிச் சாலை பணிகள் படிப்படியாக நடத் தப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிக ளுக்கு 2 ஆம் கட்ட நிலம் கையகப் படுத்தும் பணிகள் டிசம்பரில் முடிவ டையும். கோவையில் மெட்ரோ ரயில் அவிநாசி சாலை, சரவணம்பட்டி இடது புறத்தில் அமைய உள்ளது. இந்த பணி களால் பாதிப்பு ஏற்படாது. திட்ட சாலைக்கு என ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்,  ரூ.20 கோடிக்கு அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள் ளது. கல்விக்கடனுக்கு 2,500 விண்ணப் பம் வாங்கி உள்ளோம். இதில், வங்கி களில் உள்ள பிரச்சனை குறித்து தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக மாவட்ட வரு வாய் அலுவலர் மூலம் குழு அமைத்து 2  வாரங்களில் பிரச்சனைக்கு தீர்வு காணப் படும். கோவைக்கு கல்விக்கடன் வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயித் துள்ளது. இதில், அரசு பள்ளி மாண வர்கள் மற்றும் யாருக்கு தேவை என் பதை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூ ரியில் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது, என்றார்.